கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வாக்கு சேகரிப்பின்போது குழந்தைகளுடன் இணைந்து சிலம்பம் சுழற்றி வாக்காளர்களிடம் ஆதரவு திரட்டினார். அவருக்கு AIADMK சார்பில் பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது.
Coimbatore: கோவை குனியமுத்தூர் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளரும் முன்னாள் அமைச்சர்ருமான எஸ்.பி.வேலுமணி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு பல்வேறு பகுதிகளுக்கு நேரடியாக சென்று வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அவரது தேர்தல் பிரசார பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.


அதன் தொடர்ச்சியாக இன்று குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் வாக்கு சேகரிக்க சென்ற அவர், அந்த பகுதி மக்களை நேரில் சந்தித்து வாக்கு கேட்டு பிரசாரம் மேற்கொண்டார். அப்பொழுது அவருக்கு சிலம்பம் சுழற்றி AIADMK சார்பில் பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது.


வரவேற்பின்போது குழந்தைகளுடன் இணைந்து அவரும் சிலம்பம் சுழற்றி வாக்காளர்கள் மத்தியில் வாக்கு சேகரித்தார். தமிழ் பாரம்பரிய கலையான சிலம்பாட்டத்தை வெளிப்படுத்தும் வகையில் நடந்த இந்த நிகழ்வு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தொண்டாமுத்தூர் தொகுதியில் அனைத்து பகுதிகளிலும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் எஸ்.பி.வேலுமணி, வாக்காளர்களின் ஆதரவை திரட்டுவதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.
அதன் தொடர்ச்சியாக இன்று குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் வாக்கு சேகரிக்க சென்ற அவர், அந்த பகுதி மக்களை நேரில் சந்தித்து வாக்கு கேட்டு பிரசாரம் மேற்கொண்டார். அப்பொழுது அவருக்கு சிலம்பம் சுழற்றி AIADMK சார்பில் பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது.
வரவேற்பின்போது குழந்தைகளுடன் இணைந்து அவரும் சிலம்பம் சுழற்றி வாக்காளர்கள் மத்தியில் வாக்கு சேகரித்தார். தமிழ் பாரம்பரிய கலையான சிலம்பாட்டத்தை வெளிப்படுத்தும் வகையில் நடந்த இந்த நிகழ்வு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தொண்டாமுத்தூர் தொகுதியில் அனைத்து பகுதிகளிலும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் எஸ்.பி.வேலுமணி, வாக்காளர்களின் ஆதரவை திரட்டுவதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.