வறட்சி காலத்தில் வன உயிரினங்களை பாதுகாக்க வனப்பகுதிக்குள் தாதுஉப்பு சத்து உணவுகள் மற்றும் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது- கோவை மாவட்ட வன அலுவலர் பேட்டி

கோவை வனப்பகுதியில் கடந்த சில மாதங்களாக நிலவி வரும் கடும் வறட்சியினைத் தொடர்ந்து, வன உயிரினங்களுக்கு தாது உப்பு சக்தி கொண்ட உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது என கோவை மாவட்ட வன அலுவலர் ராம சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.



இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:- கோவை மாவட்டத்தில் 7 வன சரகங்கள் உள்ளன. கோவை வனப்பகுதி 790 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது.

கடந்த சில மாதங்களாக போதிய மழை இல்லாத காரணத்தால் அனைத்து பகுதிகளிலும் வறட்சி நிலவிவருகிறது. வன உயிரினங்களுக்கு பல்வேறு பகுதிகளில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. 5 ஆயிரம் லிட்டர் முதல் 10 ஆயிரம் லிட்டர்கள் கொள்ளளவு கொண்ட இந்த தொட்டிகள் கடந்த 3 வருடங்களுக்கு முன்னரே கட்டி முடிக்கப்பட்டுவிட்டது. அவையனைத்தும் தற்போது நல்ல நிலையில் உள்ளன.

ஒவ்வொரு வன சரகத்திலும் குறைந்தது 7 இடங்களில் குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. மாலை நேரத்தில் அனைத்து உரினங்களும் இங்கு வந்து குடிநீர் அருந்தி செல்கின்றன. மழை பெய்தால் தான் வன உயிரிகள் வாழும்.

வனப் பகுதியை சுற்றி இருக்கும் கிராமத்திலுள்ள கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

கால்நடைகளும் வன உயிரினங்களும் வனத்தை ஒட்டி உள்ள பகுதிகளில் வந்து நீர் அருந்துவதால் தற்போது வனவிலங்குகள் அருந்தும் குடிநீரில் நோய் தடுப்பு மருந்துகள் கலக்கப்பட்டு வனத்துறையால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் கால்நடைகளில் இருந்து வன உயினரினங்களுக்கு நோய்கள் பரவும் அபாயம் தடுக்கப்பட்டுள்ளது.

மேலும், வறட்சியால் ஏற்படும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டுள்ளது. வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் காட்டு தீ கண்காணிப்பாளர்கள் வனப்பகுதிக்குள் ரோந்து செல்கின்றனர். இதனால், காட்டுத் தீ பரவாமல் உள்ளது.

அதிகப்படியான வெயில் மற்றும் வறட்சியினை வனவிலங்குகள் தாங்கும் வகையில் அதிகப்படியான நீர் ஆதாரங்களும், தாது உப்பு சக்தி கொண்ட பொருட்களையும் வைத்துள்ளோம். இதனால் வன உயிரினங்கள் ஆரோக்கியமாக இருக்கும்" இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...