கோவை மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் உயர்வு: நீர்வளத்துறை அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு, அமராவதி, திருமூர்த்தி ஆகியவற்றின் தற்போதைய நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்களை நீர்வளத்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். ஏப்ரல் 13 நிலவரப்படி அனைத்து அணைகளுக்கும் நீர்வரத்து தொடர்கிறது.


Coimbatore: கோவை மாவட்டம் மற்றும் அதனை ஒட்டிய திருப்பூர் மாவட்டப் பகுதிகளில் அமைந்துள்ள முக்கிய அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர்வரத்து விவரங்களை நீர்வளத்துறை அதிகாரிகள் ஏப்ரல் 13ஆம் தேதி நிலவரப்படி வெளியிட்டுள்ளனர்.







ஆனைமலையை அடுத்து அமைந்துள்ள ஆழியாறு அணை 120 அடி கொள்ளளவு கொண்டதாகும். அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் நீர் வரத்தால், தற்போது 66.75 அடியாக நீர்மட்டம் உள்ளது. இந்த அணைக்கு வினாடிக்கு 364 கன அடி நீர் வரத்து பதிவாகியுள்ள நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 154 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.







பொள்ளாச்சியை அடுத்து அமைந்துள்ள பரம்பிக்குளம் அணை 72 அடி கொள்ளளவு கொண்டதாகும். தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து தொடர்ந்து நீர்வரத்து கிடைத்து வருகிறது. தற்போது 46.02 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. வினாடிக்கு 35 கன அடி நீர்வரத்து இருந்தாலும், அணையில் இருந்து வினாடிக்கு 1100 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.







வால்பாறை பகுதியில் அமைந்துள்ள சோலையாறு அணை 160 அடி கொள்ளளவு கொண்டது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் நீர் வரத்தால், தற்போது 6.11 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 25 கன அடி நீர்வரத்து உள்ள நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 5 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.







திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அமராவதி அணை 90 அடி கொள்ளளவு கொண்டது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து தொடர்ந்து நீர் வரத்தால், தற்போது 35.07 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இந்த அணைக்கு தற்போது நீர்வரத்து இல்லை என்றாலும், அணையில் இருந்து வினாடிக்கு 10 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.







திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணை 60 அடி கொள்ளளவு கொண்டது. தொடர் நீர்வரத்தால் தற்போது 48.28 அடியாக நீர்மட்டம் உள்ளது. இந்த அணைக்கு வினாடிக்கு 636 கன அடி நீர்வரத்து பதிவாகியுள்ள நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 1174 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது என நீர்வளத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.





இந்த அறிவிப்பு விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் பயனுள்ள தகவலாக அமைகிறது. மழைக்காலத்தில் அணைகளின் நீர்மட்ட நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து வருவதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...