உதகை மலை ரயில் தடத்தில் சரிந்த மண்ணை அகற்றும் பணியில் ஊழியர்கள் தீவிரம்

குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு பலத்த சூறாவளிக்காற்றுடன் கனமழை பெய்தது. இதில், நீலகிரி, குன்னூர், உதகை உள்ளிட்ட பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டது.



இதில், உதகை மலை ரயில் தடத்திலும் மண்சரிவு ஏற்பட்டதால் மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, மேட்டுப்பாளையம் ரயில்வேத்துறை அதிகாரிகள் உதகை ரயில் தண்டவாளத்தில் சரிந்த மண்ணை பொக்லைன் மூலம் அகற்றி சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



இதனிடையே, சீரமைப்பு பணிகள் தொடர்ந்து மேற்கொண்டு வரும் நிலையில் நேற்று முன்தினம் தண்டவாளத்தில் விழுந்த மரத்தில் மோதிய சரக்கு ரயிலால் இருவர் காயம் அடைந்தனர்.



இந்த நிலையில் மலை ரயில் இயக்கப்படாததால் முன்பதிவு செய்த சுற்றுலா பயணிகள் பலர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தற்போது, பணிகள் மிகவும் வேகமாக நடந்து வருவதால் நாளை முதல் மலை ரயில் சேவை துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Newsletter

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...

12,522 மெட்ரிக் டன் உர இருப்பு கோவையில்; முறைகேடு செய்தால் உரிமம் ரத்து

கோவை மாவட்டத்தில் வரவிருக்கும் கோடைப்பயிர் சாகுபடிக்காக 12,522 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை...

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...