கிணத்துக்கடவு: மகளிரும் மாணவர்களும் திமுக அரசின் இரு கண்கள் – அரசின் சாதனைகளை முன்வைத்து கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயன் பிரச்சாரம்..!

கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதியில் பல்வேறு இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் திமுக வேட்பாளர் சபரி கார்த்திகேயன், கிணத்துக்கடவு மேற்கு ஒன்றியம் லட்சுமி நகர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.


கோவை: கிணத்துக்கடவு தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயன், கிணத்துக்கடவு மேற்கு ஒன்றியம் குறிச்சி பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.



இன்றைய பிரச்சாரத்தின் போது மக்களிடையே பேசிய அவர், “மக்கள் நலனையே முதன்மையாகக் கொண்டு செயல்படும் அரசு தான் திராவிட மாடல் அரசு. தொலைநோக்கு பார்வையுடன் சிந்தித்து, மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய பல்வேறு திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகிறார் நமது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

தி.மு.க ஆட்சியின் இரு கண்களாக மகளிரும், படிக்கும் மாணவர்களும் இருந்து வருகின்றனர். 2021ஆம் ஆண்டு வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தவுடன், மகளிர் சுய உதவிக் குழுக்களின் கடன்களை முற்றிலுமாக தள்ளுபடி செய்து, அவர்களின் கடன் சுமையை குறைத்தார். மகளிர் உரிமைத்தொகை வழங்கி பொருளாதார பாதுகாப்பு அளித்தார். விடியல் பயணத் திட்டம் மூலம் அவர்களின் தினசரி செலவுகளை குறைத்து, சேமிப்பை உருவாக்கும் சூழல் ஏற்படுத்தினார்.



வருங்கால சந்ததிகளை சீர்மையான மக்களாக உருவாக்க, மாணவர்கள் நலனுக்காக பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம், இளைஞர்கள் தங்கள் திறனை வளர்த்துக்கொண்டு செயலாற்றிட ‘நான் முதல்வன்’ திட்டம் என வளர்ச்சி மற்றும் சமூக நீதியை முன்னிறுத்தி பல்வேறு புரட்சிகர திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி, தமிழ்நாட்டை வளர்ச்சி பாதையில் திமுக அரசு முன்னேற்றியுள்ளது” என்றார்.

நேற்றைய தினம் குறிச்சி தெற்கு பகுதியில் பேசிய அவர், மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை விமர்சித்தவர்கள் இன்று அதையே தங்களது தேர்தல் வாக்குறுதிகளில் சேர்த்துள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும், மகளிர் உரிமைத்தொகை திட்டம், ரூபாய் 8000 கூப்பன் மூலம் தேவையான உபயோகப் பொருட்களை வாங்கிக்கொள்ளும் திட்டம், பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம் ஆகியவற்றிற்கு தாய்மார்கள் அளித்துள்ள அமோக வரவேற்பையும் எடுத்துக்கூறினார்.



அதேபோல், பணிபுரியும் மகளிருக்கு உதவும் வகையில், தொழிற்சாலைகள் அதிகம் உள்ள நகரங்களில் 1000 குழந்தைகள் காப்பகங்கள் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அளித்துள்ள தேர்தல் வாக்குறுதிகளையும் அவர் வலியுறுத்தினார்.

கிணத்துக்கடவு தொகுதி வளர்ச்சிக்காகவும், இப்பகுதி மக்களின் தேவைகளை நிறைவேற்றி, எப்போதும் மக்கள் அணுகக்கூடிய பிரதிநிதியாக இருந்து பணியாற்றுவேன் என்று பிரச்சாரத்தின் போது வாக்குறுதி அளித்தார்.

வாக்கு சேகரிப்பின் போது, ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், மாவட்ட கவுன்சிலர் ராஜன் உள்ளிட்ட பலர் திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...