சாரட் குதிரை வண்டியில் பிரசாரம்: சிங்காநல்லூர் தொகுதியில் AIADMK வேட்பாளர் K R ஜெயராம் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் AIADMK வேட்பாளர் K R ஜெயராம் சாரட் குதிரை வண்டியில் பாப்பநாயக்கன் பாளையம் பகுதிகளில் வீதி வீதியாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். பொதுமக்கள் மேள தாள பூஜையுடன் உற்சாகமாக வரவேற்றனர்.


Coimbatore: தேசிய ஜனநாயக கூட்டணியின் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி AIADMK வேட்பாளர் K R ஜெயராம் பாரம்பரிய முறையில் சாரட் குதிரை வண்டியில் அமர்ந்து வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார். பாப்பநாயக்கன் பாளையம் பகுதிக்குட்பட்ட ஆவாரம்பாளையம், இ.பி காலனி, வி.ஜி. ராவ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று பொதுமக்களை சந்தித்தார்.




இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு வேட்பாளர் ஜெயராம் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். அப்பகுதி மக்கள் மேள தாள முழக்கத்துடன் பூக்கள் தூவி ஆரத்தி எடுத்து உற்சாகமாக வரவேற்றனர். பாரம்பரிய குதிரை வண்டி பிரசாரம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.




இந்த வாக்கு சேகரிப்பு பணியில் பகுதி செயலாளர்கள் மௌனசாமி, வார்டு செயலாளர்கள் C K D யுவராஜ், சந்தானம், ராஜ்குமார், அரவிந்த், ரமேஷ், ரகுநாத், சால்ட் வெள்ளியங்கிரி, ரகுபதி, சாரமேடு பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டனர். தேசிய ஜனநாயக கூட்டணியின் BJP, AMMK, PMK உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்களும் பங்கேற்றனர்.






AIADMK கட்சியின் நிர்வாகிகள், செயல்வீரர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் இந்த வாக்கு சேகரிப்பு பணியில் ஆர்வத்துடன் பங்கேற்று ஆதரவு அளித்தனர். பாரம்பரிய சாரட் குதிரை வண்டி பிரசாரம் மூலம் மக்களை நேரடியாக அணுகி தங்களது கருத்துகளை வேட்பாளர் பகிர்ந்து கொண்டார்.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...