வானதி சீனிவாசனுக்கு உடல்நலக்குறைவு: கோவை வடக்கில் அண்ணாமலை சூறாவளிப் பிரச்சாரம்

கோவை வடக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு தீவிர பிரச்சாரத்தால் காலில் கடுமையான வீக்கம் ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள் 48 மணி நேர ஓய்வு அறிவுறுத்தியுள்ள நிலையில், நாளை முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை மேட்டுப்பாளையம் சாலையில் காலை 9 மணிக்கு பிரச்சாரம் மேற்கொள்கிறார்.


Coimbatore: கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி BJP வேட்பாளரும், கட்சியின் தேசிய மகளிர் அணித் தலைவருமான வானதி சீனிவாசனுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில், தீவிர வாக்குச் சேகரிப்பு பணியில் ஈடுபட்ட வானதி சீனிவாசனுக்கு காலில் கடுமையான வீக்கம் ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக கோவை வடக்கு தொகுதி முழுவதும் அதிகாலை முதல் நள்ளிரவு வரை இடைவிடாது பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த வானதி சீனிவாசன், தொடர் பயணத்தின் காரணமாக உடல்நலக் குறைவுக்கு ஆளானார். இதனையடுத்து அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அடுத்த 48 மணி நேரம் முழுமையாக ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.



வானதி சீனிவாசன் ஓய்வில் இருக்கும் நிலையில், பிரச்சாரப் பணிகள் தொய்வின்றி நடைபெற வேண்டும் என்பதற்காக தமிழக BJP முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை நாளை கோவை வடக்குத் தொகுதியில் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். தனது 'சகோதரி' வானதி சீனிவாசனுக்காக களமிறங்கும் அண்ணாமலை, வாக்காளர்களை நேரடியாக சந்தித்து ஆதரவு கேட்க உள்ளார்.



நாளை (ஏப்ரல் 11) காலை 9 மணிக்கு மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தீயணைப்பு நிலையம் அருகில் அண்ணாமலையின் பிரச்சாரப் பயணம் தொடங்க உள்ளது. இந்த பிரச்சாரத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

காலில் ஏற்பட்ட வீக்கம் குணமடைந்தவுடன், வானதி சீனிவாசன் மீண்டும் தனது இறுதிக் கட்டப் பிரச்சாரத்தைத் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு எஞ்சியுள்ள நாட்களில் தீவிர பரப்புரை மேற்கொள்ள BJP திட்டமிட்டுள்ள நிலையில், இந்த உடல்நலக் குறைவு தற்காலிக இடையூறை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...