உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பகல் 1 மணி முதல் இரவு 11 மணி வரை போக்குவரத்து மாற்றம் அமலுக்கு வரும். பழனி, பொள்ளாச்சி வழித்தடங்களுக்கு மாற்று வழிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் மாரியம்மன் கோவில் வருடாந்திர தேர் திருவிழா இன்று மாலை 4 மணியளவில் நடைபெற உள்ளதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் (NH 209) போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.






தேர் திருவிழாவை முன்னிட்டு, இன்று பகல் 1 மணி முதல் இரவு 11 மணி வரை தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டு, மாற்று வழிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர் திருவிழாவில் கலந்துகொள்ள எதிர்பார்க்கப்படுவதால், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.





போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, பழனியில் இருந்து உடுமலை வழியாக கோவை மற்றும் பொள்ளாச்சிக்கு செல்லும் அனைத்து வகை வாகனங்களும் பாலப்பம்பட்டி தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் இருந்து பிரிந்து, 4 வழி சாலை வழியாக செல்ல வேண்டும். இந்த மாற்று வழி மூலம் வாகனங்கள் மீண்டும் பொள்ளாச்சி சாலையை அடையலாம்.




அதேபோல், பொள்ளாச்சியில் இருந்து உடுமலை மற்றும் பழனி வழியாக வரும் வாகனங்கள் ராகல் பாவி பிரிவில் பிரிந்து செல்ல வேண்டும். அங்கிருந்து பல்லடம் சாலை வழியாக தாராபுரம் சாலை சந்திப்பு வழியாக வந்து மீண்டும் பழனி சாலையை அடையலாம் என போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.





உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா பல நூற்றாண்டு பழமையான பாரம்பரிய விழாவாகும். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் இந்த விழா சிறப்பாக நடைபெறுகிறது. இந்த ஆண்டு தேர் இழுப்பு விழாவில் பெரும் திரளான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.




போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள், வாகன ஓட்டிகள் மாற்று வழிகளை பின்பற்றி, தேர் திருவிழா வழித்தடத்தில் வாகனங்களை கொண்டு வர வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளனர். விழாவின் போது கூடுதல் காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விழா முடிந்து போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பிய பின்னரே நெடுஞ்சாலை போக்குவரத்திற்கு திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...