மூலப்பொருள் விலை உயர்வால் 'ஜாப் ஒர்க்' நிறுவனங்கள் இயந்திர கட்டணம் உயர்த்த 'டாக்ட்', 'காட்மா' தொழில் அமைப்பினர் முடிவு

கோவையில் மூலப்பொருட்கள் விலை உயர்வால் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், Job Work நிறுவனங்கள் CNC, VMC இயந்திர Hour Rate கட்டணங்களை 15-30 சதவீதம் உயர்த்த TAGCT, CODMA தொழில் அமைப்புகள் தீர்மானம் நிறைவேற்றின. உற்பத்தி நிறுவனங்கள் கட்டணத்தை ₹300-ல் இருந்து ₹130 வரை குறைத்ததால் தொழில் முனைவோர் பாதிப்பு.


Coimbatore: மூலப்பொருட்கள் விலை உயர்வால் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக 'டாக்ட்', 'காட்மா' தொழில் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். 



இதுகுறித்து 'டாக்ட்' தொழில் அமைப்பின் தலைவர் ஜேம்ஸ் கூறும்போது, கோவையில் 'ஜாப் ஒர்க்'செய்யும் தொழில் முனைவோர் படுமோசமான நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர். ஆயிரக்கணக்கான குறுந்தொழில் முனைவோர் 'சிஎன்சி', 'விஎம்சி' இயந்திரங்களை வங்கிகளில் கடன் மூலம் பெற்று தொழில் செய்து வருகின்றனர். அனைவருக்கும் 'ஜாப் ஒர்க்'கிடைக்காத சூழ்நிலையை பயன்படுத்தி உற்பத்தி சார்ந்த தொழில் நிறுவனங்கள் 'சிஎன்சி' இயந்திரங்களுக்கு Hour Rateகட்டணத்தை 300 ரூபாய்க்கு 130 ரூபாய் வரை கட்டணத்தை குறைத்து கொடுப்பதால் 'ஜாப் ஒர்க்' செய்யும் தொழில் முனைவோர் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே உற்பத்தி சார்ந்த தொழில் முனைவோர் 'ஜாப் ஒர்க்' தொழில் முனைவோருக்கு உரிய முறையில் இயந்திர கட்டணத்தை நிர்ணயித்து வழங்க வேண்டும். இது தொடர்பாக எங்கள் அலுவலகத்தில் நடந்த சிறப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.



'காட்மா' தொழில் அமைப்பின் தலைவர் சிவக்குமார் கூறும்போது, மூலப் பொருட்களை விலை உயர்வு, வரி அதிகம் செலுத்துதல், குறுந்தொழில் நிறுவனங்களுக்கு வாடகை அதிகம் நிர்ணயிக்கப்படுவது,தொழிலார்களுக்கான ஊதியம் அதிகரித்துள்ளது உள்ளிட்ட காரணங்களால் குறுந்தொழில் முனைவோருக்கு அதிக நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் 'ஜாப் ஒர்க்' அடிப்படையில் பணியாற்றும் தொழில் நிறுவனங்கள் லாபம் இல்லாத நிலையில் செயல்பட்டு வரும் அவல நிலை காணப்படுகிறது.

எனவே 'ஜாப் ஒர்க்' தொழில் நிறுவனங்கள் இயந்திரங்களுக்கான 'Hour Rate' 15 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை உயர்த்தினால் மட்டுமே தொழிலில் நிலைத்திருக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. எங்கள் அலுவலகத்தில் நடந்தகூட்டத்தில் இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். 

மூலப்பொருட்களுக்கான இறக்குமதி வரியை குறைத்து விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...