வேட்புமனு தாக்கல் செய்த 2 நாட்களில் 110 வழக்கு: தேர்தல் ஆணையத்திடம் K. Surya புகார்

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி பொதுச்செயலாளர் K. Surya, வேட்புமனு தாக்கல் செய்த இரண்டு நாட்களில் தன் மீது 110 வழக்குகள் சுமத்த முயற்சிக்கப்படுவதாகக் குற்றம் சாட்டி தேர்தல் ஆணையம் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பியுள்ளார்.


Coimbatore: இந்து மக்கள் கட்சி (தமிழகம்) மாநில இளைஞரணி பொதுச்செயலாளர் K. Surya, எதிர்வரும் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட முடிவு செய்து, அதற்கான வேட்புமனுவை கடந்த புதன்கிழமை (02.04.2026) அன்று பேரூர் தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்துள்ளார்.






இந்நிலையில், வேட்புமனு தாக்கல் செய்த அடுத்த இரண்டு நாட்களிலேயே காவல் துறையினர் உள்நோக்கத்துடன் அவர் மீது பல பொய் வழக்குகளைப் பதிவு செய்ய முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டி, தமிழகத் தேர்தல் ஆணையம் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு அவர் புகார் மனு அனுப்பியுள்ளார்.






வேட்புமனு தாக்கல் செய்த இரண்டே நாட்களில், சில காவல்துறையினரின் தூண்டுதலின் பேரில் சுமார் 110 வழக்கு தன் மீது சுமத்த முயற்சிப்பதாக K. Surya தெரிவித்துள்ளார். மக்கள் செல்வாக்கு இருப்பதை அறிந்து, தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தடுக்கும் நோக்கிலும், தனது பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலும் இந்தச் செயல் திட்டமிட்டு செய்யப்படுவதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.






ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் மீது பல்வேறு வழக்குகள் இருக்கும் நிலையில், தன்னை மட்டும் குறிவைத்து இத்தனை வழக்குகளைப் போட முயற்சிப்பது ஒரு மனித உரிமை மீறல் என அவர் சாடியுள்ளார். குறிப்பாக கோவை மாநகர செல்வபுரம் காவல் நிலையக் காவல்துறையினர் இத்தகைய செயல்களில் ஈடுபடுவதாக தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.






இது தொடர்பாக தமிழக கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் IAS, கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி IAS, சென்னை மாவட்ட ஆட்சியர் ராதாகிருஷ்ணன் IAS மற்றும் தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் ஆகியோருக்கு அவர் அவசரப் புகார் மனுக்களை அனுப்பியுள்ளார்.






தன் மீது சுமத்தப்படும் பொய் வழக்குகளை நீதிமன்றத்தின் மூலம் சட்டப்படி எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும், தேர்தல் ஆணையம் இந்த விவகாரத்தில் தலையிட்டு உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.


Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...