தொழிலாளியை தாக்கி ஜாதி அவமதிப்பு: இருவருக்கு ஆயுள் தண்டனை

Coimbatore மலையாண்டிபட்டினம் பகுதியில் தேங்காய் உரிக்கும் தொழிலாளி பட்டீஸ்வரனை இரும்புக் கம்பியால் தாக்கி ஜாதி அவமதிப்பு செய்த இருவருக்கு சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. குற்றவாளிகளுக்கு தலா ரூ.3,000 அபராதமும் விதிக்கப்பட்டது.


Coimbatore: கோட்டூர் அருகே ஆதிதிராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்த தொழிலாளியை இரும்புக் கம்பியால் தாக்கி ஜாதி அவமதிப்பு செய்த வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை ஜாதி வன்கொடுமைகள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கோவை மாவட்டம், கோட்டூர் மலையாண்டிபட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் பட்டீஸ்வரன் (55). ஆதிதிராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்த இவர் தேங்காய் உரிக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 24.8.2019-ல் பட்டீஸ்வரன் வேலைக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது, அதே பகுதியில் வசிக்கும் மாற்று ஜாதியைச் சேர்ந்த சந்திரகுமார் (34), முரளிதரன் (33) ஆகியோர் பட்டீஸ்வரன் வீட்டின் முன் நின்று கொண்டிருந்தனர்.

எனது வீட்டின் முன் ஏன் தேவையில்லாமல் நின்று கொண்டிருக்கிறீர்கள் என கேட்டதால், அவர்கள் இருவரும் பட்டீஸ்வரனுடன் தகராறில் ஈடுபட்டனர். அப்போது ஜாதிப் பெயரைச் சொல்லி இழிவாகப் பேசியதுடன், அவரை இரும்புக் கம்பியால் தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த பட்டீஸ்வரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து கோட்டூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

இந்த வழக்கு கோவை ஜாதி வன்கொடுமைகள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை மார்ச் 25 அன்று விசாரித்த நீதிபதி K. விவேகானந்தன், குற்றஞ்சாட்டப்பட்ட சந்திரகுமார், முரளிதரன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.3,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நடைபெற்ற கொலை வழக்கை விசாரித்த இளஞ்சிறார் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு...

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...

கோவையில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ஹெல்மெட்டுகள் பறிமுதல்: கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய தர நிர்ணய அமைவனம் (B...

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர்-சென்னை சிறப்பு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிப்பு

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர் மற்றும் சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டுள...