தொழிலாளியை தாக்கி ஜாதி அவமதிப்பு: இருவருக்கு ஆயுள் தண்டனை

Coimbatore மலையாண்டிபட்டினம் பகுதியில் தேங்காய் உரிக்கும் தொழிலாளி பட்டீஸ்வரனை இரும்புக் கம்பியால் தாக்கி ஜாதி அவமதிப்பு செய்த இருவருக்கு சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. குற்றவாளிகளுக்கு தலா ரூ.3,000 அபராதமும் விதிக்கப்பட்டது.


Coimbatore: கோட்டூர் அருகே ஆதிதிராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்த தொழிலாளியை இரும்புக் கம்பியால் தாக்கி ஜாதி அவமதிப்பு செய்த வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை ஜாதி வன்கொடுமைகள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கோவை மாவட்டம், கோட்டூர் மலையாண்டிபட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் பட்டீஸ்வரன் (55). ஆதிதிராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்த இவர் தேங்காய் உரிக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 24.8.2019-ல் பட்டீஸ்வரன் வேலைக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது, அதே பகுதியில் வசிக்கும் மாற்று ஜாதியைச் சேர்ந்த சந்திரகுமார் (34), முரளிதரன் (33) ஆகியோர் பட்டீஸ்வரன் வீட்டின் முன் நின்று கொண்டிருந்தனர்.

எனது வீட்டின் முன் ஏன் தேவையில்லாமல் நின்று கொண்டிருக்கிறீர்கள் என கேட்டதால், அவர்கள் இருவரும் பட்டீஸ்வரனுடன் தகராறில் ஈடுபட்டனர். அப்போது ஜாதிப் பெயரைச் சொல்லி இழிவாகப் பேசியதுடன், அவரை இரும்புக் கம்பியால் தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த பட்டீஸ்வரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து கோட்டூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

இந்த வழக்கு கோவை ஜாதி வன்கொடுமைகள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை மார்ச் 25 அன்று விசாரித்த நீதிபதி K. விவேகானந்தன், குற்றஞ்சாட்டப்பட்ட சந்திரகுமார், முரளிதரன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.3,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...