சட்டமன்ற தேர்தலுக்கான EVM மற்றும் VVPAT கருவிகள் முதல்கட்ட சமவாய்ப்பு செயல்முறை நிறைவு

Coimbatore மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT கருவிகளை தொகுதி வாரியாக ஒதுக்கீடு செய்வதற்கான முதல்கட்ட சமவாய்ப்பு செயல்முறை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் தலைமையில் அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெற்றிகரமாக நடைபெற்றது. ஒதுக்கீடு செய்யப்பட்ட கருவிகள் பாதுகாப்பு அறைகளில் இருப்பு வைக்கப்பட்டன.


Coimbatore: எதிர்வரும் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவிகளை (VVPAT) சட்டமன்ற தொகுதி வாரியாக ஒதுக்கீடு செய்வதற்கான முதல்கட்ட சமவாய்ப்பு செயல்முறை (First Randomisation) மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர்பவன் குமார் தலைமையில் நடைபெற்றது.




இந்த முக்கியமான நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பிரிவு அலுவலர் முகமது குதரதுல்லா, Coimbatore மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், தேர்தல் வட்டாட்சியர் தணிகைவேல் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக்கட்சி பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில் இந்திய தேர்தல் ஆணையத்தால் உருவாக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திர மேலாண்மை அமைப்பு மூலமாக EVM மற்றும் VVPAT கருவிகளின் முதல்கட்ட சமவாய்ப்பு செயல்முறை (First Randomization) மேற்கொள்ளப்பட்டது. இது தேர்தல் நடைமுறையில் வெளிப்படைத்தன்மையையும் நியாயத்தையும் உறுதிசெய்யும் முக்கிய நடவடிக்கையாகும்.




முதல் சமவாய்ப்பு செயல்முறை முடிந்த பின்னர், தொகுதி வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவிகளின் (VVPAT) விரிவான பட்டியல்கள் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளுக்கும் வழங்கப்பட்டன.




இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் சரிபார்க்கும் கருவிகள் தேர்தலில் பயன்படுத்துவதற்காக சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு (RO) மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு (ARO) வழங்கப்படும் வரை பாதுகாப்பாக இருப்பு வைக்கப்படும்.




அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவிகள்கோவை மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் (Strong Room) இருப்பு வைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் அனைத்து ஏற்பாடுகளையும் ஆய்வு செய்து உறுதி செய்தனர்.




இந்த வெளிப்படைத்தன்மை நிறைந்த செயல்முறை, வரவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடைபெறுவதை உறுதிசெய்யும் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...