கோவை P.N.புதூரில் பகத்சிங் மற்றும் வே.கௌதம்குமார் நினைவு தினம் அனுசரிப்பு

கோவை மேற்கு மண்டல P.N.புதூரில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பாக விடுதலை போராட்ட வீரர் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் 95-வது நினைவுநாளும், மாவட்ட தலைவர் வே.கௌதம்குமார் நினைவுநாளும் மார்ச் 22 அன்று அனுசரிக்கப்பட்டது. மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.


Coimbatore: கோவை மேற்கு மண்டலத்திற்குட்பட்ட P.N.புதூரில் மார்ச் 22 அன்று விடுதலை போராட்ட மாவீரர்களின் நினைவுநாள் அனுசரிப்பு நடைபெற்றது.



அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் சார்பாக விடுதலை போராட்ட இளம் வீரர்களான தூக்கிலிடப்பட்ட பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் 95-வது நினைவுநாளும், மாவட்ட தலைவர் வே.கௌதம்குமார் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளும் கொண்டாடப்பட்டது.







நிகழ்ச்சியில் அவர்களின் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. P.N.புதூர் கிளை விதாத் இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினரும், மாமன்ற உறுப்பினருமான K.சாந்தி, மண்டல செயலாளர் N.சந்திரன், AIYF மண்டல தலைவர் புஷ்பராஜ், மாதர் சங்க மண்டல செயலாளர் செல்வி உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.







அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற கோவை மாவட்ட தலைவராக செயல்பட்டு வந்த தோழர் வே.கௌதம்குமார் கடந்த ஆண்டு (2024) மார்ச் 23 அன்று சாலை விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பலனின்றி அகால மரணமடைந்தார்.







விடுதலை போராட்ட மாவீரன் பகத்சிங் பிறந்த நாளிலேயே பிறந்து, மாவீரன் பகத்சிங் தூக்கிலிடப்பட்ட நாளிலேயே இறந்த தோழர் கௌதம்குமார் அவர்களின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...