கோவை P.N.புதூரில் பகத்சிங் மற்றும் வே.கௌதம்குமார் நினைவு தினம் அனுசரிப்பு

கோவை மேற்கு மண்டல P.N.புதூரில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பாக விடுதலை போராட்ட வீரர் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் 95-வது நினைவுநாளும், மாவட்ட தலைவர் வே.கௌதம்குமார் நினைவுநாளும் மார்ச் 22 அன்று அனுசரிக்கப்பட்டது. மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.


Coimbatore: கோவை மேற்கு மண்டலத்திற்குட்பட்ட P.N.புதூரில் மார்ச் 22 அன்று விடுதலை போராட்ட மாவீரர்களின் நினைவுநாள் அனுசரிப்பு நடைபெற்றது.



அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் சார்பாக விடுதலை போராட்ட இளம் வீரர்களான தூக்கிலிடப்பட்ட பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் 95-வது நினைவுநாளும், மாவட்ட தலைவர் வே.கௌதம்குமார் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளும் கொண்டாடப்பட்டது.







நிகழ்ச்சியில் அவர்களின் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. P.N.புதூர் கிளை விதாத் இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினரும், மாமன்ற உறுப்பினருமான K.சாந்தி, மண்டல செயலாளர் N.சந்திரன், AIYF மண்டல தலைவர் புஷ்பராஜ், மாதர் சங்க மண்டல செயலாளர் செல்வி உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.







அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற கோவை மாவட்ட தலைவராக செயல்பட்டு வந்த தோழர் வே.கௌதம்குமார் கடந்த ஆண்டு (2024) மார்ச் 23 அன்று சாலை விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பலனின்றி அகால மரணமடைந்தார்.







விடுதலை போராட்ட மாவீரன் பகத்சிங் பிறந்த நாளிலேயே பிறந்து, மாவீரன் பகத்சிங் தூக்கிலிடப்பட்ட நாளிலேயே இறந்த தோழர் கௌதம்குமார் அவர்களின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...