கோவை P.N.புதூரில் பகத்சிங் மற்றும் வே.கௌதம்குமார் நினைவு தினம் அனுசரிப்பு

கோவை மேற்கு மண்டல P.N.புதூரில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பாக விடுதலை போராட்ட வீரர் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் 95-வது நினைவுநாளும், மாவட்ட தலைவர் வே.கௌதம்குமார் நினைவுநாளும் மார்ச் 22 அன்று அனுசரிக்கப்பட்டது. மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.


Coimbatore: கோவை மேற்கு மண்டலத்திற்குட்பட்ட P.N.புதூரில் மார்ச் 22 அன்று விடுதலை போராட்ட மாவீரர்களின் நினைவுநாள் அனுசரிப்பு நடைபெற்றது.



அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் சார்பாக விடுதலை போராட்ட இளம் வீரர்களான தூக்கிலிடப்பட்ட பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் 95-வது நினைவுநாளும், மாவட்ட தலைவர் வே.கௌதம்குமார் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளும் கொண்டாடப்பட்டது.







நிகழ்ச்சியில் அவர்களின் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. P.N.புதூர் கிளை விதாத் இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினரும், மாமன்ற உறுப்பினருமான K.சாந்தி, மண்டல செயலாளர் N.சந்திரன், AIYF மண்டல தலைவர் புஷ்பராஜ், மாதர் சங்க மண்டல செயலாளர் செல்வி உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.







அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற கோவை மாவட்ட தலைவராக செயல்பட்டு வந்த தோழர் வே.கௌதம்குமார் கடந்த ஆண்டு (2024) மார்ச் 23 அன்று சாலை விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பலனின்றி அகால மரணமடைந்தார்.







விடுதலை போராட்ட மாவீரன் பகத்சிங் பிறந்த நாளிலேயே பிறந்து, மாவீரன் பகத்சிங் தூக்கிலிடப்பட்ட நாளிலேயே இறந்த தோழர் கௌதம்குமார் அவர்களின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...