கோவை உக்கடம் மீன் சந்தையில் வரத்து குறைவால் விலை உயர்வு

கோவை உக்கடம் லாரிப்பேட்டை மொத்த மீன் மார்க்கெட்டில் கேரளா, கர்நாடகாவில் இருந்து வரும் மீன்கள் வரத்து குறைந்ததால் விலை அதிகரித்துள்ளது. ரம்ஜான் முடிந்து முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் கூட்டமும் அதிகரித்தது. வஞ்சிரம் கிலோ ரூ.900 வரை விற்பனையானது.


Coimbatore: கோவை உக்கடம் லாரிப்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் மொத்த மீன் மார்க்கெட்டில் மீன்களின் வரத்து குறைந்ததால் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. தூத்துக்குடி, ராமேஸ்வரம், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து தினமும் இந்த மார்க்கெட்டிற்கு மீன்கள் வந்து சேருகின்றன.




ஒவ்வொரு நாளும் காலை நேரத்தில் செயல்படும் இந்த மொத்த மீன் மார்க்கெட்டிற்கு கோவை மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து மீன் வியாபாரிகள் வந்து மீன்களை வாங்கிச் செல்கின்றனர். மீன் விலை குறைவாக கிடைக்கும் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்களும் இங்கு நேரடியாக மீன் வாங்க வருகின்றனர்.




இந்த நிலையில், தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து வரும் மீன்களின் வரத்து தற்போது கணிசமாக குறைந்துள்ளது. மேலும், ரம்ஜான் பண்டிகை முடிந்து முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் நேற்று மீன் மார்க்கெட்டில் வழக்கத்தை விட கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. வரத்து குறைவு மற்றும் கூட்டம் அதிகரிப்பு ஆகிய காரணங்களால் மீன்களின் விலை கணிசமாக உயர்ந்திருந்தது.




நேற்று மீன் மார்க்கெட்டில் வஞ்சிரம் மீன் கிலோவிற்கு ரூ.900, சின்ன ஊழி ரூ.400, அயிலை ரூ.300, மத்தி ரூ.300, இறால் ரூ.550, கிளி மீன் ரூ.500, விலை மீன் ரூ.300, திருக்கை ரூ.250, கொடுவாய் ரூ.600, கண்ணாடி பாறை ரூ.130 என விற்பனையானது.




இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், "வழக்கமாக வாங்கும் விலையை விட மீன்களின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. இதுதவிர கிலோவிற்கு ரூ.20 முதல் ரூ.30 வரை சுத்திகரிப்புக் கட்டணமும் கூடுதலாக செலுத்த வேண்டியுள்ளது. இதனால் ஏமாற்றமே மிஞ்சியது" என்று தெரிவித்தனர்.




இதுபற்றி மீன் வியாபாரிகள் கூறுகையில், "கேரளாவில் இருந்து வரும் மீன்களின் வரத்து கணிசமாக குறைந்துள்ளது. வரத்து குறைந்துள்ளதால் மட்டுமே விலை அதிகரித்துள்ளது. ஒரு சில வாரங்களில் மீன்களின் வரத்து அதிகரித்து விலை கணிசமாக குறைய வாய்ப்புள்ளது" என்று தெரிவித்தனர்.

Newsletter

கோவை ராமசெட்டிபாளையத்தில் கஞ்சா விற்பனை முயற்சி: 2.4 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது

கோவை பேரூர் காவல் நிலையத்தை சேர்ந்த போலீசார் ராமசெட்டிபாளையம் பகுதியில் குற்றத்தடுப்பு ரோந்தில் ஈடுபட்டபோது, விற்பனைக்கா...

சட்டமன்ற தேர்தலுக்கான EVM மற்றும் VVPAT கருவிகள் முதல்கட்ட சமவாய்ப்பு செயல்முறை நிறைவு

Coimbatore மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT கருவ...

மூலப்பொருள் விலை உயர்வு: ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் அதிகரிப்பு - SIEMA அறிவிப்பு

கோவையை தலைமையிடமாகக் கொண்ட SIEMA, மூலப்பொருட்கள் விலை தொடர்ந்து உயர்வதால் ஏப்ரல் மாதம் முதல் பம்ப்செட் விலையை 7.5 முதல்...

ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் வரை உயரும்: சீமா அறிவிப்பு

காப்பர் உள்ளிட்ட மூலப்பொருள் விலை 50 சதவீதம் உயர்ந்ததால், ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 7.5 முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்க...

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் மாவட்டத் தலைவர் ஜே. ரமேஷ் குமார் முன்னிலையில் நடைபெற்றது...

கோவை பீளமேடுவில் சாலையோரம் தூங்கிய நபர் தலையில் கல்லால் தாக்கப்பட்டு கொலை

கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் பகுதியில் சாலையோரம் தூங்கிய 56 வயது நபர் ரங்கநாதன் மர்ம நபரால் தலையில் கல்லால் தாக்கப்பட்டு...