கோவை உக்கடம் மீன் சந்தையில் வரத்து குறைவால் விலை உயர்வு

கோவை உக்கடம் லாரிப்பேட்டை மொத்த மீன் மார்க்கெட்டில் கேரளா, கர்நாடகாவில் இருந்து வரும் மீன்கள் வரத்து குறைந்ததால் விலை அதிகரித்துள்ளது. ரம்ஜான் முடிந்து முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் கூட்டமும் அதிகரித்தது. வஞ்சிரம் கிலோ ரூ.900 வரை விற்பனையானது.


Coimbatore: கோவை உக்கடம் லாரிப்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் மொத்த மீன் மார்க்கெட்டில் மீன்களின் வரத்து குறைந்ததால் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. தூத்துக்குடி, ராமேஸ்வரம், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து தினமும் இந்த மார்க்கெட்டிற்கு மீன்கள் வந்து சேருகின்றன.




ஒவ்வொரு நாளும் காலை நேரத்தில் செயல்படும் இந்த மொத்த மீன் மார்க்கெட்டிற்கு கோவை மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து மீன் வியாபாரிகள் வந்து மீன்களை வாங்கிச் செல்கின்றனர். மீன் விலை குறைவாக கிடைக்கும் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்களும் இங்கு நேரடியாக மீன் வாங்க வருகின்றனர்.




இந்த நிலையில், தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து வரும் மீன்களின் வரத்து தற்போது கணிசமாக குறைந்துள்ளது. மேலும், ரம்ஜான் பண்டிகை முடிந்து முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் நேற்று மீன் மார்க்கெட்டில் வழக்கத்தை விட கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. வரத்து குறைவு மற்றும் கூட்டம் அதிகரிப்பு ஆகிய காரணங்களால் மீன்களின் விலை கணிசமாக உயர்ந்திருந்தது.




நேற்று மீன் மார்க்கெட்டில் வஞ்சிரம் மீன் கிலோவிற்கு ரூ.900, சின்ன ஊழி ரூ.400, அயிலை ரூ.300, மத்தி ரூ.300, இறால் ரூ.550, கிளி மீன் ரூ.500, விலை மீன் ரூ.300, திருக்கை ரூ.250, கொடுவாய் ரூ.600, கண்ணாடி பாறை ரூ.130 என விற்பனையானது.




இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், "வழக்கமாக வாங்கும் விலையை விட மீன்களின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. இதுதவிர கிலோவிற்கு ரூ.20 முதல் ரூ.30 வரை சுத்திகரிப்புக் கட்டணமும் கூடுதலாக செலுத்த வேண்டியுள்ளது. இதனால் ஏமாற்றமே மிஞ்சியது" என்று தெரிவித்தனர்.




இதுபற்றி மீன் வியாபாரிகள் கூறுகையில், "கேரளாவில் இருந்து வரும் மீன்களின் வரத்து கணிசமாக குறைந்துள்ளது. வரத்து குறைந்துள்ளதால் மட்டுமே விலை அதிகரித்துள்ளது. ஒரு சில வாரங்களில் மீன்களின் வரத்து அதிகரித்து விலை கணிசமாக குறைய வாய்ப்புள்ளது" என்று தெரிவித்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...

கோவை மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 90% முடிவு; விடுபட்ட வீடுகளுக்கு ICCC உதவி எண்கள் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 முதற்கட்ட வீட்டுக் கணக்கெடுப்பு பணிகள் 90% நிறைவு. விடுபட்ட வீட...

அமராவதி அணை நீர்மட்டம் 57.52 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணை 33.79 அடியாக பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் 57.52 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 33.79...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது....

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...