மேயர் மற்றும் ஆணையாளர் கோவையில் பல்வேறு வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தனர்

கோவை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் பல்வேறு இடங்களில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தனர். குளம் தூர்வாருதல், மழைநீர் வடிகால் அமைத்தல், பாதாள சாக்கடை புதுப்பித்தல் போன்ற பணிகள் ஆய்வு செய்யப்பட்டன.


கோவை: கோவை மாநகராட்சியின் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் ஆகியோர் நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தனர்.



கிழக்கு மண்டலத்தில் உள்ள சிங்காநல்லூர் குளத்தில் தூர்வாருதல் மற்றும் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்வது தொடர்பாக மேயர் மற்றும் ஆணையாளர் ஆய்வு மேற்கொண்டனர்.



அதே மண்டலத்தில் உள்ள சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் தேங்கும் மழைநீரை விரைவாக வெளியேற்றும் வகையில் கூடுதலாக 32-HP மின் மோட்டார்கள் அமைக்கப்படும் பணியையும் ஆணையாளர் பார்வையிட்டார்.



மத்திய மண்டலத்தில், திருச்சி சாலை ராமநாதபுரம் சந்திப்பு பகுதியில் பழுதடைந்த பாதாள சாக்கடையின் பழைய பிரதான குழாய்களுக்கு பதிலாக புதிய குழாய்கள் பதிக்கும் பணியை ஆணையாளர் ஆய்வு செய்தார். இப்பணி நவீன முறையில் (Trench Less Method) மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவித்தார்.



அதே மண்டலத்தில் உள்ள திருச்சி சாலை நிர்மலா கல்லூரி பகுதியில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணியையும் ஆணையாளர் பார்வையிட்டார்.



மேற்கு மண்டலத்தில் உள்ள சிவானந்தா காலனி ரயில்வே பாலம் அருகில் தேங்கும் மழை நீரை விரைவாக வெளியேற்றும் வகையில் சுமார் 18 மீட்டர் நீளத்திற்கு வடிகாலுடன் கூடிய ரெடிமேடு சிறுபாலம் அமைக்கும் பணியையும் ஆணையாளர் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வுப் பணிகளில் கிழக்கு மண்டல குழுத்தலைவர் இலக்குமி இளஞ்செல்விகார்த்திக், மாமன்ற உறுப்பினர்கள் ஆதிமகோஸ்வரி, சிங்கை சிவா, உதவி செயற்பொறியாளர் ராஜேஸ்கண்ணா, மண்டல சுகாதார அலுவலர் முருகன், உதவி ஆணையர் முத்துச்சாமி, உதவி ஆணையர் செந்தில்குமரன், உதவி செயற்பொறியாளர் ஹேமலதா, உதவி பொறியாளர்கள் கமலக்கண்ணன், உதவி ஆணையர் துரைமுருகன், உதவி செயற்பொறியாளர் சவிதா, மாமன்ற உறுப்பினர் பேபிசுதா, உதவி பொறியாளர் ஹரிபிரசாத், பாலச்சந்தர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...