சிறுமுகை அருகே லிங்காபுரம் கிராமத்தில் சிறுத்தை தாக்குதல்: மக்கள் அச்சம்

சிறுமுகை அருகே லிங்காபுரம் கிராமத்தில் குடியிருப்புக்குள் புகுந்து சிறுத்தை ஆட்டை வேட்டையாடிச் சென்றதால் மக்கள் அச்சம். சிறுத்தையை உடனடியாக பிடிக்க கோரிக்கை.


Coimbatore: கோவை மாவட்டம் சிறுமுகை அருகே உள்ள லிங்காபுரம் கிராமத்தில் குடியிருப்புக்குள் புகுந்து சிறுத்தை ஆட்டை வேட்டையாடிச் சென்றதால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

வனப்பகுதிக்கு அருகே அமைந்துள்ள லிங்காபுரம் கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உதயகுமார் என்பவர் தனது வீட்டின் காம்பவுண்டுக்குள் செட் அமைத்து ஆடு மாடு போன்ற கால்நடைகளை வளர்த்து வருகிறார்.



நேற்று இரவு அருகிலுள்ள வனப்பகுதியில் இருந்து வந்த சிறுத்தை ஒன்று, உதயகுமார் மற்றும் அவரது மனைவி இருவரும் வீட்டின் வெளியே அமர்ந்திருந்த போது, அவர்களது கண் முன்னாலேயே அவர்களது ஆட்டை அடித்து கவ்வி இழுத்துச் சென்றுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த உதயகுமார் உடனடியாக வனத்துறை சோதனை சாவடிக்கு ஓடிச் சென்றார். ஆனால் அங்கே ஆட்கள் யாரும் இல்லாததால், பின்னர் தொலைபேசி மூலம் தகவல் அளித்து வன ஊழியர்களை வரவழைத்துள்ளார்.

வனத்துறையினர் சோதனை செய்தபோது சிறுத்தையின் கால் தடங்கள் மற்றும் சிறுத்தை இழுத்துச் சென்ற அடையாளங்கள் தென்பட்டன. இதையடுத்து சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுப்பதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த 40 ஆண்டுகளாக இந்த கிராமத்தில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருந்த நிலையில், தற்போது ஊருக்கு மத்தியில் உள்ள குடியிருப்புக்குள் நுழைந்து சிறுத்தை வேட்டையாடி சென்ற சம்பவம் அந்த பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் நடைபெற்ற வீட்டின் அருகே 500 மீட்டர் தொலைவில் அரசு தொடக்கப் பள்ளியும் செயல்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கும் கால்நடைகளுக்கும் அச்சுறுத்தலாக மாறியுள்ள அந்த சிறுத்தையை உடனடியாக கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...