கோவை அவிநாசி மேம்பாலம் மற்றும் காளீஸ்வரா மில் சாலை மேம்பாலத்தில் மழைநீர் வெளியேற்றும் பணிகளை ஆய்வு செய்த ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் M. சிவகுரு பிரபாகரன் அவிநாசி மேம்பாலம் அருகில் ரெடிமேடு சிறுபாலம் மற்றும் காளீஸ்வரா மில் சாலை மேம்பாலம் அருகில் மின் மோட்டார்கள் பொருத்தும் பணிகளை ஆய்வு செய்தார்.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் M. சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், இன்று (16.10.2024) மத்திய மண்டலத்திற்குட்பட்ட இரண்டு முக்கிய பகுதிகளில் மழைநீர் வெளியேற்றும் பணிகளை ஆய்வு செய்தார்.

முதலில், அவிநாசி மேம்பாலம் அருகில் உள்ள பிரதான சாலை ஆடிஸ் வீதி பகுதியில் தேங்கும் மழை நீரை விரைவாக வெளியேற்றும் வகையில் சுமார் 30 மீட்டர் நீளத்திற்கு வடிகாலுடன் கூடிய ரெடிமேடு சிறுபாலம் அமைக்கும் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டார். இப்பணிகளை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.



இந்த ஆய்வின் போது, செயற்பொறியாளர் கருப்பசாமி, உதவி பொறியாளர் கமலக்கண்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.



அடுத்ததாக, ஆணையாளர் காளீஸ்வரா மில் சாலை மேம்பாலம் அருகில் தேங்கும் மழை நீரை விரைவாக வெளியேற்றும் வகையில் புதிதாக 2 மின் மோட்டார்கள் பொருத்தப்படுவது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார். இங்கும் மின் மோட்டார்களை விரைவாக பொருத்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.



இந்த ஆய்வின் போது, உதவி செயற்பொறியாளர் ஹேமலதா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.



இந்த இரு பகுதிகளிலும் மேற்கொள்ளப்படும் பணிகள் மழைக்காலத்தில் நீர் தேங்குவதைத் தடுக்கும் என்றும், பொதுமக்களின் போக்குவரத்திற்கு எந்த இடையூறும் ஏற்படாமல் இருக்கும் என்றும் ஆணையாளர் தெரிவித்தார்.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...