கோவையில் கீழே கிடந்த ரூ.50,000 பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த பெண்ணுக்கு பாராட்டு

கோவையில் சாலையில் கிடந்த ரூ.50,000 பணத்தை போலீசில் ஒப்படைத்த நிர்மலா என்ற பெண்ணை போலீஸ் கமிஷனர் பாராட்டினார். பின்னர் உரிய நபரிடம் பணம் திருப்பி அளிக்கப்பட்டது.


கோவை: கோவை சித்தாபுதூர் பாலாஜி நகரைச் சேர்ந்த நிர்மலா (41) என்ற பெண், சாலையில் கிடந்த ரூ.50,000 பணத்தை போலீசில் ஒப்படைத்த நேர்மையான செயலுக்காக பாராட்டப்பட்டுள்ளார்.

கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி, நிர்மலா தனது தாயார் சாரதாவுடன் பாலசுந்தரம் ரோட்டில் நடைபயிற்சி சென்றபோது, சாலையில் ரூ.50,000 பணக்கட்டு கிடந்ததைக் கண்டார். பணத்தை தேடி யாரும் வராததால், அவர் அந்தப் பணத்தை ரேஸ்கோர்ஸ் போலீஸ் இன்ஸ்பெக்டர் அர்ஜூனிடம் ஒப்படைத்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், நிர்மலாவை நேரில் அழைத்து பாராட்டி, சான்றிதழ் வழங்கினார். அதே நேரத்தில், பணத்தை இழந்தவரைக் கண்டறிய போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர், செபாஸ்டியன் என்பவர் தான்தான் அந்தப் பணத்தை இழந்ததற்கான ஆதாரங்களைக் காட்டினார். இதையடுத்து, நேற்று (அக்டோபர் 15) ரேஸ்கோர்ஸ் இன்ஸ்பெக்டர் அர்ஜூன், நிர்மலாவின் முன்னிலையில் செபாஸ்டியனிடம் பணத்தை ஒப்படைத்தார்.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...