கோவை நீர்நிலைகளில் செல்பி எடுப்பதை தவிர்க்க வேண்டும் - மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

வடகிழக்கு பருவமழை காரணமாக கோவையில் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது. பொதுமக்கள் நீர்நிலைகளில் செல்பி எடுப்பதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அறிவுறுத்தியுள்ளார்.



கோவை: கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவை மாநகராட்சி சார்பில் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மழைக்காலத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி சில முக்கிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளார். அவற்றில் முக்கியமானவை:

1. ஆபத்தான ஆறு மற்றும் நீர்நிலைப் பகுதிகளில் செல்பி எடுப்பது, குளிப்பது போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும்.

2. கனமழையின் போது இரயில்வே சுரங்கப்பாதை, தரைப்பாலம் உள்ளிட்ட இடங்களில் மழை நீர் தேங்கியிருக்கும் போது அப்பகுதிகளில் இரண்டு சக்கர வாகனங்களில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்.

3. மழையினால் வீடுகளுக்கு அருகில் மரங்கள், கட்டிடங்கள் விழும் அபாயம் இருந்தால், உடனடியாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள அவசர கட்டுப்பாட்டு மையத்திற்கு அல்லது மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு மையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவதன் மூலம், மழைக்காலத்தில் ஏற்படக்கூடிய உயிர் மற்றும் பொருள் சேதங்களைத் தவிர்க்க முடியும் என மாவட்ட நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...