திருப்பூரில் சிலிண்டர் கசிவு: பள்ளி மாணவிக்கு 75 சதவீதம் தீக்காயம்

திருப்பூர் வஞ்சிபாளையத்தில் சிலிண்டர் கசிவால் தீ விபத்து. 6ஆம் வகுப்பு மாணவி கௌசல்யா (11) 75 சதவீதம் தீக்காயத்துடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி. தந்தைக்கும் காயம்.


திருப்பூர்: திருப்பூர் இடுவாய் அருகே வஞ்சிபாளையம் பகுதியில் இன்று காலை சிலிண்டர் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் 6ஆம் வகுப்பு மாணவி கௌசல்யா (11) மற்றும் அவரது தந்தை ஜீவா (44) தீக்காயமடைந்தனர்.

ஜீவா தனது மனைவி மகாலட்சுமி (36) மற்றும் இரண்டு மகள்களுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். அவரது மகள்கள் ஸ்ரீமதி (13) மற்றும் கௌசல்யா (11) இடுவம்பாளையம் அரசு பள்ளியில் முறையே 8 மற்றும் 6ஆம் வகுப்பு பயின்று வந்தனர்.



காலை வேளையில் வீட்டில் சிலிண்டர் மாற்றும்போது, வாஷர் வழியாக எரிவாயு கசிந்து தீப்பற்றியது. மகாலட்சுமி தனது மகள் ஸ்ரீமதியுடன் வெளியேறினார். ஜீவா உள்ளே சென்று கௌசல்யாவை மீட்டார். இதில் கௌசல்யா மற்றும் ஜீவா தீக்காயமடைந்தனர்.

இருவரும் உடனடியாக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஜீவாவிற்கு கைகளில் மட்டும் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் கௌசல்யாவிற்கு உடல் முழுவதும் 75% தீக்காயம் ஏற்பட்டுள்ளது.

கௌசல்யாவின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். வீரபாண்டி காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...