வடகிழக்கு பருவமழை காரணமாக மேட்டுப்பாளையம்-உதகை மலை ரயில் சேவை இரண்டு நாட்களுக்கு ரத்து

வடகிழக்கு பருவமழை காரணமாக மேட்டுப்பாளையம்-உதகை இடையிலான மலை ரயில் சேவை நவம்பர் 16, 17 ஆகிய இரு நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.



கோவை: வடகிழக்கு பருவமழை காரணமாக மேட்டுப்பாளையம்-உதகை இடையிலான மலை ரயில் சேவை இரண்டு நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு தினசரி மலை ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழை காரணமாக நவம்பர் 16 மற்றும் 17 ஆகிய இரண்டு நாட்களுக்கு மலைரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை பல்சக்கரம் மூலம் இயக்கப்படும் இந்த மலை ரயில், கல்லாரில் இருந்து அடர்ந்த வனப்பகுதிக்குள் பயணித்து செல்கிறது. நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மலை ரயில் பாதை அமைந்துள்ள பகுதிகளில் பல்வேறு இடங்களில் காற்றாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக மண் சரிவு ஏற்பட்டு ரயில்வே தண்டவாளங்கள் சேதமடைய வாய்ப்புள்ளது. மேலும், மரங்கள் முறிந்து விழுவதற்கான வாய்ப்புகள் உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேட்டுப்பாளையம்-உதகை இடையிலான மலை ரயில் சேவை இரண்டு நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

நவம்பர் 16 மற்றும் 17 ஆகிய இரண்டு நாட்கள் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை செல்லும் மலை ரயில் சேவை முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Newsletter

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...