வடகிழக்கு பருவமழை காரணமாக மேட்டுப்பாளையம்-உதகை மலை ரயில் சேவை இரண்டு நாட்களுக்கு ரத்து

வடகிழக்கு பருவமழை காரணமாக மேட்டுப்பாளையம்-உதகை இடையிலான மலை ரயில் சேவை நவம்பர் 16, 17 ஆகிய இரு நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.



கோவை: வடகிழக்கு பருவமழை காரணமாக மேட்டுப்பாளையம்-உதகை இடையிலான மலை ரயில் சேவை இரண்டு நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு தினசரி மலை ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழை காரணமாக நவம்பர் 16 மற்றும் 17 ஆகிய இரண்டு நாட்களுக்கு மலைரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை பல்சக்கரம் மூலம் இயக்கப்படும் இந்த மலை ரயில், கல்லாரில் இருந்து அடர்ந்த வனப்பகுதிக்குள் பயணித்து செல்கிறது. நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மலை ரயில் பாதை அமைந்துள்ள பகுதிகளில் பல்வேறு இடங்களில் காற்றாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக மண் சரிவு ஏற்பட்டு ரயில்வே தண்டவாளங்கள் சேதமடைய வாய்ப்புள்ளது. மேலும், மரங்கள் முறிந்து விழுவதற்கான வாய்ப்புகள் உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேட்டுப்பாளையம்-உதகை இடையிலான மலை ரயில் சேவை இரண்டு நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

நவம்பர் 16 மற்றும் 17 ஆகிய இரண்டு நாட்கள் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை செல்லும் மலை ரயில் சேவை முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Newsletter

கோவை காவல்துறை கான்ஸ்டபிள் மாநில போட்டியில் தங்கத்துக்குப் பின் வெண்கலம் வென்றார்

கோவை நகர காவல்துறை வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றும் படையைச் சேர்ந்த காவல் கான்ஸ்டபிள் M. விஜய், செப்டம்பர் 10ஆம் தே...

Coimbatore Police Constable Adds Bronze After Gold at State-Level Competition

Police Constable M. Vijay of the Coimbatore City Police Bomb Detection and Disposal Squad (BDDS), who won gold in the Ro...

வால்பாறையில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது குருபூஜை; அனைத்துக் கட்சியினரும் மலரஞ்சலி

வால்பாறையில் சுதந்திரப் போராட்டத் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது குருபூஜை விழா கோலாகலமாக நடைபெற்றது. அனைத்துக் கட்சி...

கோவையில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அமைச்சர் வே சம்பத்குமார் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நடைபெற்று வரும் சாலை பணிகள், நமக்கு நாமே திட்டம், அம்ருத் திட்டப் பணிகள் ஆகியவற்றை பிற்படுத...

கோவையில் விபத்தில் மூளைச்சாவடைந்த நபரின் உறுப்புகள் தானம்: 3 பேருக்கு மறுவாழ்வு

கோவையில் துடியலூர் அருகே இருசக்கர வாகன விபத்தில் மூளைச்சாவடைந்த 51 வயது நபரின் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் அவரது குடு...

கோவையில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 நடைமுறைப்படுத்தல் குறித்த கலந்தாய்வுக் கூட்டம்

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தலைமையில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 நடைமுறைப்படுத்தல் குறித்த கலந்தாய்வுக்...