கோவை: பொன்னூத்து அருவியில் வெள்ளப்பெருக்கு - பக்தர்கள் கோவிலுக்குச் செல்ல முடியாத நிலை

கோவையில் தொடர் கனமழை காரணமாக, துடியலூர் அருகே உள்ள பொன்னூத்து அம்மன் கோவில் மலையின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கோவில் வளாகம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் பக்தர்கள் செல்ல முடியவில்லை.



கோவை: கோவையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக, துடியலூர் அருகே உள்ள வரப்பாளையத்தில் அமைந்துள்ள பொன்னூத்து அம்மன் கோவில் மலையில் இருந்து பாயும் பொன்னூத்து அருவியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

தென் தமிழகம் மற்றும் தென் மேற்கு வங்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வழிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, கோவை, திருப்பூர், நீலகிரி, தேனி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

கோவையில் ஏற்பட்டுள்ள இந்த கனமழையின் விளைவாக, பொன்னூத்து அம்மன் கோவில் வளாகம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக பக்தர்கள் யாரும் கோவிலுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்யும் மழையால் அருவியின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், அப்பகுதி மக்கள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மழை தொடர்ந்து பெய்து வருவதால், வெள்ளப்பெருக்கு மேலும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், தேவையில்லாமல் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் உள்ளூர் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...