கோவை சுரங்கப்பாதையில் மழை பாதிப்புள்ள இடங்களில் வாகனங்கள் செல்ல கலர் மார்க்: அமைச்சர் செந்தில் பாலாஜி

கோவையில் பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மழை பாதிப்புகளைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.



இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி,, மாநகராட்சி ஆணையர் சிவகுருபிரபாகரன், கோவை எம்பி ராஜ்குமார், மேயர் ரங்கநாயகி மற்றும் அனைத்துத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.



கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, பருவமழை முன்னெச்சரிக்கை குறித்து முதல்வர், துணை முதல்வர் வழிகாட்டுதல் வழங்கியுள்ளதாகவும், கோவையில் கடந்த இரு தினங்களில் பெய்த மழை காரணமாக மக்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லாத வகையில் சிறப்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

கோவையில் மழைநீர் தேங்கும் இடங்களாக 6 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அந்த இடங்களில் தண்ணீர் தேங்காமல் இருப்பதற்கான தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார். மேலும், சுரங்கப்பாதைகளில் மழைநீர் பாதிப்பு இருக்கும் இடங்களில் எந்த வாகனம் செல்ல முடியும் என்பதைத் தெரிவிக்கும் விதமாக கலர் மார்க் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மின்சாரத் துறை பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், சென்னை, கோவை உட்பட அனைத்து இடங்களிலும் மின் விநியோகத்தில் பாதிப்பு இருக்காது என்றும் அமைச்சர் உறுதியளித்தார். உயிரிழப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும், மின் கம்பிகள் அறுந்து உயிர்ச்சேதம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக சில இடங்களில் மின்தடை ஏற்படுத்தப்படுகிறது என்றும் அவர் விளக்கினார்.



தமிழகம் முழுவதும் மின்வாரிய அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் கொண்ட வாட்ஸ்அப் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, பாதிப்புகள் குறித்த தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்பட உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். அரசியலுக்காக சிலர் பழைய வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழகத்தில் அதிக முறை முதல்வர் சுற்றுப்பயணம் செய்த மாவட்டம் கோவை தான் என்றும், கோவை மக்களுக்கு அளவுகடந்த திட்டங்களை கொடுத்தவர் முதல்வர் என்றும் அமைச்சர் பாராட்டினார். சென்னைக்கு இணையாக வேகமாக வளர்ந்து வரும் நகரமாக கோவை இருப்பதாகவும், வரக்கூடிய காலத்தில் இன்னும் அதிக திட்டங்கள் கோவைக்கு வரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...