கோவை சுரங்கப்பாதையில் மழை பாதிப்புள்ள இடங்களில் வாகனங்கள் செல்ல கலர் மார்க்: அமைச்சர் செந்தில் பாலாஜி

கோவையில் பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மழை பாதிப்புகளைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.



இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி,, மாநகராட்சி ஆணையர் சிவகுருபிரபாகரன், கோவை எம்பி ராஜ்குமார், மேயர் ரங்கநாயகி மற்றும் அனைத்துத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.



கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, பருவமழை முன்னெச்சரிக்கை குறித்து முதல்வர், துணை முதல்வர் வழிகாட்டுதல் வழங்கியுள்ளதாகவும், கோவையில் கடந்த இரு தினங்களில் பெய்த மழை காரணமாக மக்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லாத வகையில் சிறப்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

கோவையில் மழைநீர் தேங்கும் இடங்களாக 6 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அந்த இடங்களில் தண்ணீர் தேங்காமல் இருப்பதற்கான தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார். மேலும், சுரங்கப்பாதைகளில் மழைநீர் பாதிப்பு இருக்கும் இடங்களில் எந்த வாகனம் செல்ல முடியும் என்பதைத் தெரிவிக்கும் விதமாக கலர் மார்க் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மின்சாரத் துறை பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், சென்னை, கோவை உட்பட அனைத்து இடங்களிலும் மின் விநியோகத்தில் பாதிப்பு இருக்காது என்றும் அமைச்சர் உறுதியளித்தார். உயிரிழப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும், மின் கம்பிகள் அறுந்து உயிர்ச்சேதம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக சில இடங்களில் மின்தடை ஏற்படுத்தப்படுகிறது என்றும் அவர் விளக்கினார்.



தமிழகம் முழுவதும் மின்வாரிய அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் கொண்ட வாட்ஸ்அப் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, பாதிப்புகள் குறித்த தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்பட உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். அரசியலுக்காக சிலர் பழைய வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழகத்தில் அதிக முறை முதல்வர் சுற்றுப்பயணம் செய்த மாவட்டம் கோவை தான் என்றும், கோவை மக்களுக்கு அளவுகடந்த திட்டங்களை கொடுத்தவர் முதல்வர் என்றும் அமைச்சர் பாராட்டினார். சென்னைக்கு இணையாக வேகமாக வளர்ந்து வரும் நகரமாக கோவை இருப்பதாகவும், வரக்கூடிய காலத்தில் இன்னும் அதிக திட்டங்கள் கோவைக்கு வரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...