மேட்டுப்பாளையம் அருகே காரமடையில் பிளேக் மாரியம்மன் கோவிலை இடிக்க முயற்சி: பாஜக மற்றும் இந்து அமைப்புகள் எதிர்ப்பு

மேட்டுப்பாளையம் அருகே காரமடையில் 100 ஆண்டுகள் பழமையான பிளேக் மாரியம்மன் கோவிலை இடிக்க நெடுஞ்சாலைத் துறை முயற்சி. திமுக முன்னாள் நிர்வாகியின் தூண்டுதலால் நடப்பதாக கூறி பாஜக மற்றும் இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.


கோவை: கோவை மாவட்டம் காரமடை நகராட்சிக்கு உட்பட்ட அண்ணா நகரில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிளேக் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் சாலையின் ஓரத்தில் ஒதுக்குப்புறமாக உள்ளது.

கோவிலின் அருகே திமுக முன்னாள் நிர்வாகி ஒருவரின் அப்பார்ட்மென்ட் உள்ளது. இந்தக் கட்டிடத்தை கோவில் மறைப்பதாக கூறி அதன் உரிமையாளர் மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் கோவிலை இடிக்க நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கோவில் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

மேலும், திமுகவைச் சேர்ந்த காரமடை நகர செயலாளர் வெங்கடேஷ் அவர்களும் கோவிலை இடிப்பது சம்பந்தமாக கோவில் நிர்வாகத்திற்கு கடிதம் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.



இந்த தகவலை அறிந்த பாஜக மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள், அதிமுக நகர்மன்ற உறுப்பினர் வனிதா, திமுக நகர்மன்ற உறுப்பினர் அனிதா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கோவில் முன்பு திரண்டனர்.

பாஜக மற்றும் இந்து அமைப்புகளின் பிரதிநிதிகள் கூறுகையில், "யாருக்கும் தொல்லையின்றி மேம்பாலத்துக்கு அடியில் ஒதுக்குப்புறமாக இருக்கும் கோவிலை திமுக முன்னாள் மூத்த நிர்வாகியின் தூண்டுதலின் பேரில் நெடுஞ்சாலைத் துறை இடிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம். புகார் கடிதம் கொடுத்தவர்களின் கட்டிடமே கொடுக்கப்பட்ட அனுமதியை விட கூடுதலாக ஒரு மடங்கு உயர்த்தி நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ளது. அது குறித்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் நெடுஞ்சாலைத் துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் கோவிலை இடிக்க முன்வருவதை கண்டிக்கிறோம். கோவிலை தொட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்" என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பாஜக மற்றும் இந்து அமைப்புகளின் எதிர்ப்பைத் தொடர்ந்து கோவில் இடிப்பதை நெடுஞ்சாலைத் துறை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளது.

Newsletter

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...