கோவை அரசு மேல்நிலைப்பள்ளியில் தேங்கிய மழைநீர்: மாணவர்கள் அவதி

கோவை கணபதி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மழைநீர் தேங்கி நிற்பதால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவதிப்படுகின்றனர். பெற்றோர்கள் நோய்த் தொற்று அபாயம் குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.



கோவை: கோவை மாநகர் பகுதியில் நேற்று மாலை சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக கன மழை பெய்ததால் கோவை கணபதி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது.



இதனால் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மிகவும் அவதி அடைந்துள்ளனர்.



குழந்தைகளுக்கு நோய்த் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளதாக பெற்றோர்கள் வேதனையை தெரிவித்தனர். இதனால் பள்ளிக்கு தங்கள் குழந்தைகளை அனுப்புவதற்கு அச்சமாக இருப்பதாக கூறுகின்றனர்.



மேலும், பள்ளி வளாகத்துக்கு வெளியே ஆங்காங்கே சாக்கடைத்து விடுவாறும் பணி நடைபெற்று வருவதால் சாக்கடை கழிவுநீர் தெருவில் ஓடுவதால் பள்ளி மாணவ மாணவிகள் மிகவும் அவதி அடைந்துள்ளனர்.

ஒருபுறம் பள்ளி வளாகத்தில் மழை நீர் தேங்கி நிற்பதனாலும் மறுபுறம் பள்ளி வளாகத்திற்கு வெளியே சாக்கடை சரிவர தூர்வாரததால் ஆசிரியர்கள், பள்ளி மாணவ மாணவிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இந்த நிலையில், உடனடியாக மழைநீர் வடிகால் வசதி மற்றும் சாக்கடை பிரச்சினைகளை சரி செய்ய வேண்டும் என்று பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பள்ளி நிர்வாகமும் இது தொடர்பாக உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக தெரிவித்துள்ளது.

Newsletter

கோவை மாநகர மேம்பாலங்களில் இரவு நேரத் தடை நீக்கம்

கோவை மாநகரின் காந்திபுரம், உக்கடம், அவிநாசி சாலை மற்றும் திருச்சி சாலை மேம்பாலங்களில் மார்ச் 18 முதல் அமல்படுத்தப்பட்ட இ...

மகாவீர் ஜெயந்தி முன்னிட்டு கோவையில் மார்ச் 31ல் அனைத்து மதுபானக் கடைகளும் மூடல்

கோவை மாவட்டத்தில் மார்ச் 31 மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அனைத்து அரசு மதுபானக் கடைகள், பார்கள், நட்சத்திர ஹோட்டல்க...

மடத்துக்குளம் தொகுதிக்கு அமமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் சண்முகவேலு அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் முன்னாள் அமைச்சரும் மேற்கு ம...

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...