கோவை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டன. மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் முன்னிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் இதனை துவக்கி வைத்தார்.


கோவை: கோவை சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டன. கோவை மாநகராட்சி நிர்வாகம் தனியார் நீட் பயிற்சி மையத்துடன் இணைந்து இந்த வகுப்புகளை நடத்த உள்ளது.



இந்நிகழ்வின் துவக்க விழாவில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், கோவை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், "வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். மாணவர்களின் வழக்கமான பள்ளி வகுப்புகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் இவை திட்டமிடப்பட்டுள்ளன. கோவை மாநகராட்சியின் பல்வேறு பள்ளிகளில் இருந்து இந்த வகுப்பில் சேர விரும்பும் மாணவர்கள் இப்பள்ளிக்கு அழைத்து வரப்படுவார்கள். அவர்களின் போக்குவரத்து மற்றும் உணவு செலவுகளை மாநகராட்சியே ஏற்கும்," என்று தெரிவித்தார்.

மேலும், மழை நீர் வடிகால் பணிகள் குறித்தும் அவர் பேசினார். "கோவை மாநகராட்சியில் அவிநாசி மேம்பாலம், காளீஸ்வரர் மேம்பாலம் ஆகிய இரண்டு இடங்களில் தான் அதிகளவு மழை நீர் தேங்குகிறது. இந்த இடங்களிலும் நீரை வெளியேற்றி போக்குவரத்தை சீர் செய்துள்ளோம். இனி மழைநீர் தேங்காத வண்ணம் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன," என்றார்.

ஆவாரம்பாளையம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 30 பேர் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும், அவர்களுக்கான உணவு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாகவும் ஆணையாளர் கூறினார். மேலும், அவர்கள் இழந்த ஆவணங்கள் மற்றும் புத்தகங்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

"கோவை மாநகராட்சி முழுவதும் மழை நீர் தேங்காமல் இருக்க முழு வீச்சில் பணிகள் நடைபெற்று வருகின்றன," என்று ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் உறுதியளித்தார்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...