திருப்பூர்: பொது பாதை ஆக்கிரமிப்பு - மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் முறையீடு

திருப்பூர் மாவட்டம் பழவஞ்சிபாளையம் பூங்கா நகரில் பொது பாதையை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் பழவஞ்சிபாளையம் பூங்கா நகர் பகுதியில் உள்ள பொது பாதையை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, பாதையை மீட்டுத் தரக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.

இப்பகுதியில் அரசு வழங்கிய புறம்போக்கு நிலத்தில் 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களின் குடியிருப்பு பகுதிக்கு செல்ல ஒரே ஒரு வழிப்பாதை மட்டுமே உள்ளது. இந்நிலையில், இந்த சாலைக்கு எதிர்புறத்தில் உள்ள தனியார் குடியிருப்பைச் சேர்ந்த அமுதா, நாகலட்சுமி, லட்சுமி உள்ளிட்டோர் இந்த ஒரே வழிப்பாதையையும் ஆக்கிரமிப்பு செய்து, மற்றவர்களுக்கு பயன்படுத்த அனுமதி மறுப்பதாக புகார் எழுந்துள்ளது.



தங்களுக்கு அடிப்படை தேவையான சாலை வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும், ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி அப்பகுதி மக்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் உறுதியளித்துள்ளது.

Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...