அன்னூர் அருகே தனியார் லாட்ஜில் ஆன்லைன் விபச்சாரம்: மேலாளர் உள்பட இருவர் கைது

கோவை மாவட்டம் அன்னூர் அருகே கீரநத்தம் பகுதியில் உள்ள தனியார் லாட்ஜில் ஆன்லைன் மூலம் பெண்களை வைத்து விபச்சாரத்தில் ஈடுபட்டதாக விடுதி மேலாளர் மற்றும் ஊழியர் கைது செய்யப்பட்டனர்.



Coimbatore: கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள கீரநத்தம் பகுதியில் இயங்கி வந்த தனியார் தங்கும் விடுதியில் ஆன்லைன் மூலம் பெண்களை வைத்து விபச்சாரத்தில் ஈடுபட்டதாக விடுதி மேலாளர் உள்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவில்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீரநத்தம் பகுதியில் 'வோன்டர் பாரடைஸ்' என்ற பெயரில் தனியார் தங்கும் விடுதி செயல்பட்டு வந்தது. இந்த விடுதியில் ஓயோ செயலி மூலம் அறை புக் செய்து வெளியூரிலிருந்து வந்த ஒரு வாடிக்கையாளரிடம், விடுதி மேலாளர் சரோஜ் குமார் மற்றும் ஊழியர் வர்க்கீஸ் ஆகியோர் ஆன்லைன் மூலம் பெண்களை புக் செய்து தருவதாகக் கூறி, விபச்சாரத்திற்கு தூண்டியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த நபர், கோவில்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி, குற்றம் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, விடுதி மேலாளர் சரோஜ் குமார் மற்றும் ஊழியர் வர்கீஸ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், குறிப்பிட்ட விடுதிக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் சீல் வைக்கவும் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, ஐ.டி நிறுவனங்கள் மற்றும் கல்லூரிகள் அதிகம் உள்ள சரவணம்பட்டி, கீரநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் விபச்சாரம் அதிக அளவில் நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது தொடர்பாக காவல்துறை மேலும் விசாரணை நடத்தி வருகிறது.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...