உடுமலையில் தமிழக வெற்றி கழகம் ஆலோசனைக் கூட்டம்: 2026-ல் விஜய் முதல்வராவார் என தீர்மானம்

உடுமலையில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் ஆலோசனைக் கூட்டத்தில், 2026-ல் விஜய் தமிழக முதல்வராவது உறுதி என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விழுப்புரம் மாநாடு குறித்தும் விவாதிக்கப்பட்டது.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தமிழக வெற்றி கழகத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. உடுமலை நகர தலைவர் ராமன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், 2026 ஆம் ஆண்டு தமிழக முதல்வராக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் ஆவது உறுதி என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருப்பூர் தெற்கு மாவட்டத் தலைவர் சங்கர் முன்னிலை வகித்து தொண்டர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார். விழுப்புரம் மாவட்டம் விக்ரவாண்டியில் நடைபெறவுள்ள முதல் மாநாடு குறித்தும், அதற்கான ஏற்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.



கூட்டத்தில் திருப்பூர் தெற்கு மாவட்ட தொண்டர் அணி தலைவர் திருமலை, மாணவரணி தலைவர் ஹரிஹரன், உடுமலை நகர நிர்வாகிகள் காஜா, பிரபு, சந்திரன், பிரேம்குமார், சையது இப்ராஹிம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். உடுமலை, குடிமங்கலம், உடுமலை தெற்கு ஒன்றியம், குடிமங்கலம் வடக்கு ஒன்றியம், குடிமங்கலம் ஒன்றிய மகளிர் அணி, உடுமலை தெற்கு பகுதி மகளிர் அணி மற்றும் உடுமலை நகர ஒன்றிய கிளை நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.

கூட்டத்திற்கு முன்னதாக, காமாட்சி அம்மன் கோவில், விநாயகர் கோவில், சிவன் கோவில் ஆகியவற்றில் விழுப்புரம் மாநாடு சிறப்பாக நடைபெற வேண்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய திருப்பூர் தெற்கு மாவட்டத் தலைவர் ஜி.கே. சங்கர், "விழுப்புரத்தில் நடைபெறும் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு குறித்து ஆலோசிக்கப்பட்டது. மாநாட்டுக்கு கூட்டம் அதிகமாக வரும் நிலையில், அரசின் விதிமுறைகளை எவ்வாறு பின்பற்ற வேண்டும் என்பது குறித்து எடுத்துக் கூறப்பட்டது," என்றார்.

மேலும் அவர், "தற்சமயம் தமிழக மக்களுக்காக வாழும் நல்ல தலைவராக விஜய் உள்ளார். மாற்றுக் கட்சி சார்ந்த பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகள் விஜய் கட்சிக்கு வர தயாராக உள்ளனர். வருகின்ற 2026 ஆம் ஆண்டு தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தமிழக முதல்வர் ஆவது உறுதி," என்று தெரிவித்தார்.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...