வால்பாறையில் வெள்ளப் பாதுகாப்பு ஒத்திகை: பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

வால்பாறையில் வடகிழக்கு பருவமழை குறைவாக உள்ள நிலையில், வருவாய் துறை அலுவலர் தலைமையில் வெள்ளப் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


Coimbatore: கோவை மாவட்டம் வால்பாறையில் வடகிழக்கு பருவமழை குறைவாக பெய்து வரும் நிலையில், வெள்ளம் குறித்த பாதுகாப்பு ஒத்திகை மற்றும் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.

வால்பாறை வருவாய் துறை அலுவலர் தலைமையில், பேரிடர் மீட்பு குழு, தீயணைப்பு துறை மற்றும் காவல் துறை ஆகியோர் இணைந்து இந்த ஒத்திகையை நடத்தினர். கூலாங்கள் ஆற்றில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ஆற்றில் அடித்துச் செல்லப்படும் ஒருவரை எவ்வாறு காப்பாற்றுவது என்பது குறித்து தத்ரூபமாக செய்து காட்டப்பட்டது.



தீயணைப்பு துறையினர், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களிடம் முக்கிய அறிவுரைகளை வழங்கினர். மழை பெய்யும் நேரங்களில் ஆற்றில் இறங்கி குளிக்க வேண்டாம் என்றும், மலைப் பகுதியில் பெய்யும் மழை காரணமாக ஆறுகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என்றும் எச்சரித்தனர். மேலும், வெள்ளத்தில் சிக்கினால் எவ்வாறு தப்பிப்பது என்பது குறித்தும் விளக்கமளித்தனர்.

இந்த ஒத்திகையில் பேரிடர் மீட்பு குழு, தீயணைப்பு துறை அதிகாரிகள், காவல் துறையினர் ஆகியோர் பங்கேற்று செயல்முறை விளக்கம் அளித்தனர். மேலும், துணை வட்டாட்சியர், பொதுப்பணித் துறை, நகராட்சி நிர்வாகத் துறை ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்த விழிப்புணர்வு நிகழ்வு, வால்பாறை பகுதியில் வெள்ளப் பாதுகாப்பு குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கும், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...