கோவையில் தீபாவளி ஷாப்பிங்: கடைக்குள் வருமாறு கட்டாயப்படுத்தினால் வழக்கு பதிவு - காவல்துறை எச்சரிக்கை

கோவை டவுன்ஹால் மற்றும் பெரிய கடை வீதி பகுதியில் தீபாவளி ஷாப்பிங் கூட்டம் அதிகரித்துள்ள நிலையில், வாடிக்கையாளர்களை கட்டாயப்படுத்தும் கடை ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.


Coimbatore: கோவை டவுன்ஹால் மற்றும் பெரிய கடை வீதி பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறிய ஜவுளி கடைகள், நகைக்கடைகள், பேன்ஸி ஸ்டோர்கள் உள்ளன. தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் ஆடை, நகைகள், பட்டாசு உள்ளிட்டவை வாங்க வருவோர் கூட்டம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், வாடிக்கையாளர்களை கவர்வதற்காக சில கடைகள் ஊழியர்களை நியமித்து, சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களை தங்கள் கடைக்கு வருமாறு கட்டாயப்படுத்துவதாக புகார்கள் எழுந்துள்ளன. சில சமயங்களில் வாடிக்கையாளர்களின் கையைப் பிடித்து இழுப்பதால் வாக்குவாதம் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில், உக்கடம் பகுதியைச் சேர்ந்த 45 வயது பெண் ஒருவர் வைசியாள் வீதியில் சென்று கொண்டிருந்தபோது, அப்பகுதியில் உள்ள துணிக்கடை ஊழியர்கள் அவரை கடைக்கு வருமாறு வற்புறுத்தியதோடு, அவதூறாகவும் பேசியதாக புகார் அளித்துள்ளார். இதையடுத்து, கடை உரிமையாளர் உட்பட நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக கோவை மாநகர காவல் துணை ஆணையர் சரவணக்குமார் கூறுகையில், "தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தொழில் போட்டியில் சிலர் இவ்வாறு நடந்து கொள்கின்றனர். இதனைக் கண்காணிக்க அப்பகுதியில் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடைக்கு வெளியே நின்று யாரையும் அழைக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களை கட்டாயப்படுத்தும் ஊழியர்கள் மற்றும் கடை உரிமையாளர்கள் மீது வழக்கு பதியப்படும்," என்று எச்சரித்தார்.

காவல்துறையின் இந்த எச்சரிக்கையை அடுத்து, கடை உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் மிகவும் கவனமாக செயல்பட வேண்டியுள்ளது. பொதுமக்களும் இது போன்ற சம்பவங்களை எதிர்கொண்டால் உடனடியாக காவல்துறையிடம் புகார் அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...