உடுமலை அருகே ஆண் குழந்தையை கடத்திய பெண் சேலத்தில் கைது

உடுமலை அருகே முக்கோணம் பகுதியில் 2 வயது ஆண் குழந்தையை காரில் கடத்திச் சென்ற பெண், சேலத்தில் வைத்து போலீசாரால் கைது செய்யப்பட்டார். குழந்தை பாதுகாப்பாக மீட்கப்பட்டது.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே முக்கோணம் பகுதியில் ஆண் குழந்தையை காரில் கடத்தி சேலத்திற்கு தப்பியோடிய பெண் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

நாமக்கல் மாவட்டம் மங்களாபுரத்தைச் சேர்ந்த அமுதா (30) என்பவர் தனது 2 வயது மகன் நிகில் கேசவனுடன் வேலை தேடி சேலம் மாவட்டத்திற்கு சென்றார். அங்கு கன்னங்குறிச்சியைச் சேர்ந்த அமுதா (39) மூலம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையைச் சேர்ந்த இந்திராணி (43) என்பவருடன் அறிமுகமானார்.

இந்திராணி, அமுதாவை அழைத்துக் கொண்டு உடுமலை பகுதிக்கு வந்தார். முக்கோணம் அருகே அமுதா இயற்கை உபாதைக்குச் சென்றபோது, இந்திராணி குழந்தையை கடத்திக் கொண்டு சென்றுவிட்டார். அமுதா உடுமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

உடனடியாக செயல்பட்ட உடுமலை போலீசார், சேலம் அரசு மருத்துவமனை அருகே இருந்த இந்திராணியை கைது செய்து உடுமலைக்கு அழைத்து வந்தனர். குழந்தையும் பாதுகாப்பாக மீட்கப்பட்டது. இச்சம்பவம் உடுமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையை கடத்திய இந்திராணியிடம் உடுமலை காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் வேகமாக பரவும் 'Madras Eye' நோய்: மக்கள் அலெர்ட்டாக இருக்க டாக்டர்கள் எச்சரிக்கை

கோவையில் 'Madras Eye' நோய் பாதிப்பு அதிகரித்து வருவதால், நாளொன்றுக்கு 10 பேர் வீதம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற...

குமரகுரு கல்வி நிறுவனங்களில் 1,675 மாணவர்களுக்கு ₹1.6 கோடி மகாத்மா காந்தி மெரிட் ஸ்காலர்ஷிப்

குமரகுரு கல்வி நிறுவனங்களில் இன்று மகாத்மா காந்தி மெரிட் ஸ்காலர்ஷிப் விழா நடைபெற்றது. கல்வி, விளையாட்டு மற்றும் NCC ஆகிய...

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...