உடுமலை அருகே ஆண் குழந்தையை கடத்திய பெண் சேலத்தில் கைது

உடுமலை அருகே முக்கோணம் பகுதியில் 2 வயது ஆண் குழந்தையை காரில் கடத்திச் சென்ற பெண், சேலத்தில் வைத்து போலீசாரால் கைது செய்யப்பட்டார். குழந்தை பாதுகாப்பாக மீட்கப்பட்டது.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே முக்கோணம் பகுதியில் ஆண் குழந்தையை காரில் கடத்தி சேலத்திற்கு தப்பியோடிய பெண் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

நாமக்கல் மாவட்டம் மங்களாபுரத்தைச் சேர்ந்த அமுதா (30) என்பவர் தனது 2 வயது மகன் நிகில் கேசவனுடன் வேலை தேடி சேலம் மாவட்டத்திற்கு சென்றார். அங்கு கன்னங்குறிச்சியைச் சேர்ந்த அமுதா (39) மூலம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையைச் சேர்ந்த இந்திராணி (43) என்பவருடன் அறிமுகமானார்.

இந்திராணி, அமுதாவை அழைத்துக் கொண்டு உடுமலை பகுதிக்கு வந்தார். முக்கோணம் அருகே அமுதா இயற்கை உபாதைக்குச் சென்றபோது, இந்திராணி குழந்தையை கடத்திக் கொண்டு சென்றுவிட்டார். அமுதா உடுமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

உடனடியாக செயல்பட்ட உடுமலை போலீசார், சேலம் அரசு மருத்துவமனை அருகே இருந்த இந்திராணியை கைது செய்து உடுமலைக்கு அழைத்து வந்தனர். குழந்தையும் பாதுகாப்பாக மீட்கப்பட்டது. இச்சம்பவம் உடுமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையை கடத்திய இந்திராணியிடம் உடுமலை காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...