கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் விஜயதசமி வித்யாரம்பம்: நூற்றுக்கணக்கான குழந்தைகள் பங்கேற்பு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் விஜயதசமி அன்று சிறப்பு வழிபாடுகளும் குழந்தைகளுக்கான வித்யாரம்பம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, குழந்தைகளுக்கு முதல் எழுத்தை கற்பித்தனர்.


Coimbatore: கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள ஐயப்பன் கோவிலில் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகளும் மழலைச் செல்வங்களுக்கான வித்யாரம்பம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

விஜயதசமி அன்று துவங்கப்படும் எந்தக் காரியமும் வெற்றிகரமாக அமையும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த நாளில் குழந்தைகளுக்கு வித்யா உபதேசம் எனும் கல்வி கற்கத் தொடங்கும் நிகழ்வு நடைபெறுவது வழக்கம். சிறு குழந்தைகளுக்கு விஜயதசமி நன்னாளில் ஆரம்பக் கல்வியைத் தொடங்கினால், அவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பது ஐதீகம்.



அதன்படி, சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் நடைபெற்ற விஜயதசமி சிறப்பு வழிபாட்டில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான பக்தர்கள், தங்களது குழந்தைகளை நெல்மணிகளில் முதல் எழுத்தை எழுத செய்தனர். பாரம்பரிய முறையில் நடைபெற்ற இந்த வித்யாரம்பம் நிகழ்ச்சி, குழந்தைகளின் எதிர்கால கல்வி வாழ்க்கைக்கு நல்ல துவக்கமாக அமைந்தது.



இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளின் கல்வி வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டும் என்று வேண்டுதல் செய்தனர். கோவில் நிர்வாகம் சார்பில் குழந்தைகளுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. விஜயதசமி வித்யாரம்பம் நிகழ்ச்சி குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் மகிழ்ச்சியான அனுபவமாக அமைந்தது.

Newsletter

ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் வரை உயரும்: சீமா அறிவிப்பு

காப்பர் உள்ளிட்ட மூலப்பொருள் விலை 50 சதவீதம் உயர்ந்ததால், ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 7.5 முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்க...

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் மாவட்டத் தலைவர் ஜே. ரமேஷ் குமார் முன்னிலையில் நடைபெற்றது...

கோவை பீளமேடுவில் சாலையோரம் தூங்கிய நபர் தலையில் கல்லால் தாக்கப்பட்டு கொலை

கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் பகுதியில் சாலையோரம் தூங்கிய 56 வயது நபர் ரங்கநாதன் மர்ம நபரால் தலையில் கல்லால் தாக்கப்பட்டு...

கோவையில் நடைபெற்ற புற்றுநோய் சிகிச்சை மாநாடு: நவீன நோய் எதிர்ப்புச் சிகிச்சை முறைகள் குறித்த விரிவான விவாதம்

கோவை KMCH மருத்துவமனையில் TAMPOS நடத்திய மூன்றாவது மாநாடு லீ மெரிடியன் ஹோட்டலில் மார்ச் 20 முதல் 22 வரை நடைபெற்றது. புற்...

கோவை P.N.புதூரில் பகத்சிங் மற்றும் வே.கௌதம்குமார் நினைவு தினம் அனுசரிப்பு

கோவை மேற்கு மண்டல P.N.புதூரில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பாக விடுதலை போராட்ட வீரர் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆ...

கோவையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டம்

கோவை அவிநாசி சாலையில் உள்ள எம்.என்.சி.ஆர். கிராண்ட் பேலஸில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக இளைஞர் அணி ஆல...