பொள்ளாச்சியில் போலீஸ் கண்காணிப்பாளர் தலைமையில் திடீர் சோதனை

கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் பொள்ளாச்சி பேருந்து நிலையம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. குட்கா, போதை பொருட்கள், லாட்டரி சீட்டுகள் மற்றும் சமூக விரோத செயல்களை தடுக்கும் நோக்கில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.



கோவை: கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் பொள்ளாச்சி பேருந்து நிலையம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. பான் மசாலா, குட்கா, போதை வஸ்துக்கள், லாட்டரி சீட்டுகள் மற்றும் சமூக விரோத செயல்களை தடுக்கும் நோக்கில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள கடைகளில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். புதிய பேருந்து நிலையத்தில் உள்ள காவலர் அறையில், கண்காணிப்பு கேமராக்கள் சரியாக இயங்குகின்றனவா என்றும், காவலர்கள் சுழற்சி முறையில் பணிக்கு வருகிறார்களா என்றும் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் கோப்புகளை ஆய்வு செய்தார்.



பழைய பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் குட்கா, பான் மசாலா போன்றவை விற்பனை செய்யப்படுகின்றனவா என போலீசார் சோதனை மேற்கொண்டனர். கடை உரிமையாளர்களிடம் அவர்களின் பிரச்சினைகள் மற்றும் குறைபாடுகள் குறித்தும் கேட்டறியப்பட்டது.

நகராட்சி பகுதியில் வாகனத் தணிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்துள்ளனரா, அவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் உள்ளதா என்பதை போலீசார் சரிபார்த்தனர். ஏடிசி தியேட்டர் பகுதியில் கடைகளின் முன்பு மது அருந்திக் கொண்டிருந்தவர்களை போலீசார் அப்புறப்படுத்தி எச்சரிக்கை விடுத்தனர்.

இந்த திடீர் சோதனையில் காவல் ஆய்வாளர்கள் ரத்தினகுமார், ராஜேஸ்வரி மற்றும் பல உதவி ஆய்வாளர்கள் உடனிருந்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் இந்த திடீர் ஆய்வு பொள்ளாச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...