உடுமலை திருப்பதி கோவிலில் புரட்டாசி 4வது சனிக்கிழமை சிறப்பு வழிபாடு; தஞ்சாவூர் ஆதீனம் சிறப்பு தரிசனம்

உடுமலை ஸ்ரீ வேங்கடேச பெருமாள் திருப்பதி கோவிலில் புரட்டாசி 4வது சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தஞ்சாவூர் ஆதீனம் ஸ்ரீசுவாமிநாத தேசிக சுவாமிகள் சிறப்பு தரிசனம் செய்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை தளி ரோட்டில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ வெங்கடேச பெருமாள் திருப்பதி கோவிலில் புரட்டாசி மாதம் 4வது சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இந்நிகழ்வில் தஞ்சாவூர் ஆதீனம் ஸ்ரீசுவாமிநாத தேசிக சுவாமிகள் சிறப்பு தரிசனம் மேற்கொண்டார்.

புரட்டாசி சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறும் இக்கோவிலில், இன்று ஸ்ரீவெங்கடேச பெருமாளுக்கு தங்க கவசம் அலங்காரம் செய்யப்பட்டு, 16 வகை அபிஷேகங்கள் மற்றும் திருமஞ்சனம் மேற்கொள்ளப்பட்டன. பால், தயிர், பன்னீர், புஷ்பம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.

தஞ்சாவூர் ஆதீனம் முனைவர் ஸ்ரீ சுவாமிநாத தேசிக சுவாமிகள் கோவிலுக்கு வருகை தந்தபோது, கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் ஸ்ரீ வெங்கடேச பெருமாள் உள்ளிட்ட பல்வேறு தெய்வங்களுக்கு வழிபாடு நடத்தினார்.



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆதீனம், "இன்றைய உலகில் ஆன்மீகம் என்பது இன்றியமையாதது. பெரிய மகான்கள் பிறந்த இந்த தேசத்தில் ஆன்மிகத்துடனே அரசியலும் இருந்து வந்தது. அரசர்களின் அரசவையில் ராஜரிஷிகள் இருந்து நிர்வாகத்தை நடத்தி வந்தனர். ஆன்மீகம் தழைக்க எல்லாவிதமான நலன்களும் கிடைக்கும்" என்று கூறினார்.

இந்நிகழ்வில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று வெங்கடேச பெருமாளை வழிபட்டனர். உடுமலை, மடத்துக்குளம், பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பக்தர்களுக்கு லட்டு, துளசி தீர்த்தம் ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டன.

புரட்டாசி 4வது சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகளுக்கான ஏற்பாடுகளை உடுமலை திருப்பதி ஸ்ரீ பாலாஜி சாரிடபிள் அறக்கட்டளை நிர்வாகிகள் மேற்கொண்டிருந்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...