கோவை மாவட்ட ஆட்சியருடன் இந்திய தொழில் வர்த்தக சபையினர் சந்திப்பு - உள்கட்டமைப்பு மேம்பாடு குறித்து விவாதம்

கோவை கலெக்டர் கிராந்திகுமார் பாடியுடன் இந்திய தொழில் வர்த்தக சபையினர் சந்திப்பு நடத்தினர். கோவையின் உள்கட்டமைப்பு மேம்பாடு குறித்து விவாதித்தனர். பல்வேறு திட்டங்களின் தற்போதைய நிலை மற்றும் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடியை இந்திய தொழில் வர்த்தக சபையினர் நேற்று (அக்டோபர் 11) சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது, கோவையின் உள்கட்டமைப்பு மேம்பாடு தொடர்பாக விரிவான கலந்துரையாடல் நடைபெற்றது.

இந்த சந்திப்பு குறித்து இந்திய தொழில் வர்த்தக சபையின் தலைவர் ராஜேஷ் லுந்த் கூறுகையில், "கிழக்கு புறவழிச்சாலை, விமான நிலைய விரிவாக்கம், கோவை-கரூர் விரைவுச் சாலை, மேட்டுப்பாளையம் மற்றும் சிங்காநல்லூரில் அமையும் மேம்பாலங்கள், எல் அண்டு டி பைபாஸ் விரிவாக்கம், கோவை மாஸ்டர் பிளான், நகர்ப்புற வளர்ச்சி ஆணையம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு திட்டங்களின் தற்போதைய நிலை மற்றும் அவற்றை விரைவுபடுத்த வேண்டிய தேவை குறித்து மாவட்ட ஆட்சியருடன் விவாதித்தோம்," என்றார்.

மேலும், "விரைவில் மாஸ்டர் பிளான் வெளியிடப்படும் என்பது உட்பட, நேர்மறையான பதில்களை மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். கோவை தொழில் வர்த்தக சபை சார்பில் தொடர்ந்து உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் தொழில் வளர்ச்சி குறித்து மாவட்ட நிர்வாகம், மத்திய, மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுவோம்," என்று ராஜேஷ் லுந்த் தெரிவித்தார்.

இந்த முக்கிய சந்திப்பில் தொழில் வர்த்தக சபையின் துணைத் தலைவர்களான நடராஜ், துரைராஜ், செயலாளர்களான பிரதீப், கார்த்திக், மற்றும் பொருளாளர் கைலாஷ்குமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர்

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர் மற்றும் மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran ஆகியோர் மாநகராட்சி...

கோவை போத்தனூரில் கட்டுமான தளத்தில் பணியாற்றிய இளைஞர் திடீர் மரணம்

கோவை போத்தனூர் கிரீன் பார்க் பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த வெள்ளலூரை சேர்ந்த 29 வயது இளைஞர் சந்தோஷ் திடீரென ம...

போதைப் பொருட்கள் தடுப்புப் படை: கோவையில் சிறப்புப் படையினர் தயார் நிலையில்!

கோவை மாநகர மற்றும் மாவட்ட காவல்துறையினர், முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்த போதைப் பொருட்கள் தடுப்புப் படை மற்றும் சிங்கப் ப...

கோவை மாநகராட்சி: குடிநீர் குறைகளை மண்டல வாரிய எண்களில் தெரிவிக்கலாம்

கோவை மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran, குடிநீர் விநியோகம் தொடர்பான குறைகளை மண்டல வாரியாக தெரிவிக்க பொதுமக்களுக்க...

கோவையில் ரூ.9.90 கோடியில் பாரா ஒலிம்பிக் உள் விளையாட்டு வளாகம் அமைக்கப்படுகிறது

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ஜீவா நகர் பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான உலகத்தரம் வாய்ந்த பா...

கோவை சிறைக்குள் தின்பண்டத்தில் மறைத்து கஞ்சா கடத்த முயற்சி : 4 பேர் மீது வழக்குப்பதிவு..!

கோவை மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு தின்பண்டங்களுக்குள் மறைத்து கஞ்சா கொடுக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளத...