கோவையில் பல்வேறு பகுதிகளில் கனமழை: போக்குவரத்து நெரிசல்

கோவை ரேஸ்கோர்ஸ் மற்றும் சிங்காநல்லூர் பகுதிகளில் கனமழை காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.


கோவை: கோவையில் இன்று (அக்டோபர் 11) பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

ரேஸ்கோர்ஸ் பகுதியில் பெய்யும் மழையின் காரணமாக நான்கு சக்கர வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் நெடுந்தூரம் வரிசையில் நிற்கின்றனர். இதனால் இப்பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து காவல்துறையினர் வந்தால் மட்டுமே போக்குவரத்தை சரி செய்ய முடியும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.



சிங்காநல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதலாக கரு மேகங்கள் சூழ்ந்து குளிர்ந்த காற்று வீசி வந்த நிலையில், தற்போது திடீரென கனமழை பெய்து வருகிறது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

திடீர் மழையால் இரு சக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். பலர் தங்கள் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்திவிட்டு மழைக்காக ஒதுங்கி நிற்கின்றனர்.

மழை தொடர்ந்து பெய்து வருவதால், வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த காவல்துறையினரின் உதவி தேவைப்படுவதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

Newsletter

நீலகிரி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வாய்ப்பு

கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், இன்று கோவை உட்பட 10 மாவட்...

கோவை மாநகராட்சி குறைதீர்க்கும் கூட்டத்தில் 49 மனுக்கள் பெறப்பட்டது

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், குடிநீர், சாலை, வரி, சுகாதாரம் உள்ள...

மடத்துக்குளம் ராஜவாய்க்காலை தூர்வாரி குடிமராமத்து பணிகள் மேற்கொள்ள கோரி விவசாயிகள் மனு

பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ள காரத்தொழவு ராஜவாய்க்காலில் குடிமராமத்து பணிகளை மேற்கொண்டு, ஆயிரம் ஏக்கர் நஞ்சை நிலங்கள...

கோவையில் 7 துணை மின் நிலையங்களில் நாளை (09.06.2026) மின் தடை

கோவையில் கவுண்டம்பாளையம், மாதம்பட்டி, மருதூர், தேவராயபுரம், பெரியநாயக்கன்பாளையம், பவானி அணை, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட 7 த...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...

கோவை பீளமேடு அவிநாசி பிரதான சாலையில் போஸ்டர் அகற்றும் பணி - கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் மாநகராட்சி ஆணையாளர் உத்தரவின் பேரில் போஸ்டர் அகற்றும் பணி நடைபெற்றது. வார்டு கவுன்சிலர...