கோவை மாநகராட்சி: ரூ.1.5 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிக்கப்பட்ட நிலம் மீட்பு

கோவை மாநகராட்சியின் 56வது வார்டில் ஆக்கிரமிக்கப்பட்ட 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டது. பட்டகே வீதியில் உள்ள ரோட்டில் அமைக்கப்பட்டிருந்த சிமென்ட் ஷீட் வீடு மற்றும் பொது கிணறு அகற்றப்பட்டன.


Coimbatore: கோவை மாநகராட்சியின் 56வது வார்டில் உள்ள பட்டகே வீதியில், மாநகராட்சிக்கு சொந்தமான ரோட்டை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த சிமென்ட் ஷீட் வீடு மற்றும் பொது கிணறு ஆகியவை அகற்றப்பட்டன. ரூ.1.5 கோடி மதிப்புள்ள இந்த நிலத்தை, மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் அக்டோபர் 10 அன்று மீட்டனர்.

56வது வார்டில் உள்ள ஒண்டிப்புதூர் சுங்கம் மைதானம் மற்றும் அடப்பக்காடு அருகில் 5.58 சென்ட் பரப்பளவு கொண்ட ரோட்டில் இந்த ஆக்கிரமிப்புகள் இருந்தன. பொது கிணறு உபயோகிக்கும் இடத்தில், 161 சதுர மீட்டர் அளவில் வேலி அமைத்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் மாநகராட்சிக்கு புகார் அளித்தனர்.

கிழக்கு மண்டல நகரமைப்பு பிரிவினர், ஆக்கிரமிப்பாளர்களுக்கு இரண்டு முறை நோட்டீஸ் அனுப்பியும், அவர்கள் தாமாக ஆக்கிரமிப்பை அகற்றவில்லை. மாறாக, அந்த இடம் தங்களுக்கு சொந்தமானது எனக் கூறி, சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட கிரையப்பத்திர நகலை சமர்ப்பித்தனர்.

நகரமைப்பு பிரிவினர் மேற்கொண்ட ஆய்வில், பத்திரப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள இடமும் மாநகராட்சி ரோட்டும் பொருந்தவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து, உதவி நகரமைப்பு அலுவலர் புவனேஸ்வரி தலைமையிலான குழுவினர் ஆக்கிரமிப்பு கட்டுமானங்களை இடித்து அகற்றினர்.

மீட்கப்பட்ட இடத்தின் மதிப்பு ரூ.1.5 கோடி என நகரமைப்பு பிரிவினர் மதிப்பிட்டுள்ளனர். மீட்கப்பட்ட இடத்தைச் சுற்றி கம்பி வேலி அமைக்க பொறியியல் பிரிவினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், பொது கிணறு அமைந்துள்ள இடத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான இடம் என்ற அறிவிப்பு பலகை வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Newsletter

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...

திருப்பூரில் கட்சித் தலைவர் மீது அவதூறு பரப்பியதாக புகார்

திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சாட்டி இந்தி...

GCT கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள EVM இயந்திரங்களை கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய EVM இயந்திரங்கள் தடாகம் சாலை GCT கல்லூரியில் பாதுகாப்பாக...

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...

கோடையில் ஐஸ்கிரீம் கலப்படம்: உற்பத்தியாளர்கள் மீது தமிழக அரசு தீவிர கண்காணிப்பு

கோடைக்காலத்தில் ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்களில் கலப்படம் அதிகரித்துள்ள நிலையில், தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை உ...