கோவை மாநகராட்சி: ரூ.1.5 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிக்கப்பட்ட நிலம் மீட்பு

கோவை மாநகராட்சியின் 56வது வார்டில் ஆக்கிரமிக்கப்பட்ட 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டது. பட்டகே வீதியில் உள்ள ரோட்டில் அமைக்கப்பட்டிருந்த சிமென்ட் ஷீட் வீடு மற்றும் பொது கிணறு அகற்றப்பட்டன.


Coimbatore: கோவை மாநகராட்சியின் 56வது வார்டில் உள்ள பட்டகே வீதியில், மாநகராட்சிக்கு சொந்தமான ரோட்டை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த சிமென்ட் ஷீட் வீடு மற்றும் பொது கிணறு ஆகியவை அகற்றப்பட்டன. ரூ.1.5 கோடி மதிப்புள்ள இந்த நிலத்தை, மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் அக்டோபர் 10 அன்று மீட்டனர்.

56வது வார்டில் உள்ள ஒண்டிப்புதூர் சுங்கம் மைதானம் மற்றும் அடப்பக்காடு அருகில் 5.58 சென்ட் பரப்பளவு கொண்ட ரோட்டில் இந்த ஆக்கிரமிப்புகள் இருந்தன. பொது கிணறு உபயோகிக்கும் இடத்தில், 161 சதுர மீட்டர் அளவில் வேலி அமைத்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் மாநகராட்சிக்கு புகார் அளித்தனர்.

கிழக்கு மண்டல நகரமைப்பு பிரிவினர், ஆக்கிரமிப்பாளர்களுக்கு இரண்டு முறை நோட்டீஸ் அனுப்பியும், அவர்கள் தாமாக ஆக்கிரமிப்பை அகற்றவில்லை. மாறாக, அந்த இடம் தங்களுக்கு சொந்தமானது எனக் கூறி, சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட கிரையப்பத்திர நகலை சமர்ப்பித்தனர்.

நகரமைப்பு பிரிவினர் மேற்கொண்ட ஆய்வில், பத்திரப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள இடமும் மாநகராட்சி ரோட்டும் பொருந்தவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து, உதவி நகரமைப்பு அலுவலர் புவனேஸ்வரி தலைமையிலான குழுவினர் ஆக்கிரமிப்பு கட்டுமானங்களை இடித்து அகற்றினர்.

மீட்கப்பட்ட இடத்தின் மதிப்பு ரூ.1.5 கோடி என நகரமைப்பு பிரிவினர் மதிப்பிட்டுள்ளனர். மீட்கப்பட்ட இடத்தைச் சுற்றி கம்பி வேலி அமைக்க பொறியியல் பிரிவினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், பொது கிணறு அமைந்துள்ள இடத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான இடம் என்ற அறிவிப்பு பலகை வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Newsletter

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...