மேட்டுப்பாளையம் அருகே தென் திருப்பதி ஸ்ரீவாரி ஆலயத்தில் வருடாந்திர பிரம்மோற்சவ திருத்தேரோட்டம்

மேட்டுப்பாளையம் அருகே ஜடையம்பாளையத்தில் உள்ள தென் திருப்பதி ஸ்ரீவாரி ஆலயத்தில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நடைபெற்றது. பக்தர்கள் திரளாக பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.



Coimbatore: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே ஜடையம்பாளையத்தில் எழுந்தருளியுள்ள தென் திருப்பதி எனப்படும் ஸ்ரீவாரி ஆலயத்தில் வருடாந்திர பிரம்மோற்சவ நிகழ்ச்சி கடந்த 4ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து மலையப்ப சாமி, ஸ்ரீதேவி, பூதேவிக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் தினந்தோறும் நடைபெற்று வந்தது.

பிரம்மோற்சவத்தின் ஒரு பகுதியாக, மலையப்ப சாமி அனுமந்த வாகனம், கருட வாகனம், சேஷ வாகனம், அன்னபட்சி வாகனம் என தினமும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்று பக்தர்களுக்கு காட்சி அளித்து வந்தார்.



விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதற்காக மலையப்பசாமி, ஸ்ரீதேவி, பூதேவிக்கு காலை முதலே சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து கோவில் முன்பு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் மலையப்ப சாமி ஸ்ரீதேவி பூதேவியுடன் எழுந்தருளினார்.

வேத விற்பனர்கள் வேத மந்திரங்கள் முழங்க, மேளதாளத்துடன் திருத்தேரானது பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. பக்தர்களின் "கோவிந்தா கோவிந்தா" கோஷங்கள் முழங்க திருத்தேர் கோவிலின் நான்கு மாட வீதிகளின் வழியாக வளம் வந்து மீண்டும் நிலையை அடைந்தது. இந்த தேரோட்ட நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...