உலக பார்வை தினம்: கோவை துடியலூரில் மாணவர்கள் விழிப்புணர்வு பிரச்சாரம்

கோவை துடியலூரில் உலக பார்வை தினத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் காவல்துறையினருடன் இணைந்து வாகனங்களின் முகப்பு விளக்குகளுக்கு கருப்பு ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தினர்.



கோவை: கோவை துடியலூர் அருகே வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி சார்பாக உலக பார்வை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.



துடியலூர் சிக்னலில் கல்லூரி மாணவ மாணவிகள் காவல்துறையினருடன் இணைந்து வாகனங்களின் முகப்பு விளக்குகளுக்கு கருப்பு ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.

ஆண்டுதோறும் அக்டோபர் 10ஆம் தேதி கடைபிடிக்கப்படும் உலக பார்வை தினத்தையொட்டி, ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலகு I மற்றும் II சார்பில் துடியலூர் பேருந்து நிலைய சந்திப்பில் இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்பட்டது.



இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் டாக்டர் ஆர்.என். உமா முன்னிலை வகித்தார். துடியலூர் காவல் நிலைய ஆய்வாளர் எஸ்.லதா, உதவி ஆய்வாளர் ஜி.குருகணேஷ், போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள் துரை, சவிதாமணி, மற்றும் பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.



இப்பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, சாலை விபத்துகளைத் தடுப்பது குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வாகனங்களின் முகப்பு பகுதியில் புல்ஸ்ஐ கருப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டது.

இந்நிகழ்வில் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் 80 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட திட்ட அலுவலர்கள் எஸ்.கார்த்திக் மற்றும் சி.வினு ஆகியோர் செய்திருந்தனர்.

Newsletter

கோவை ராமசெட்டிபாளையத்தில் கஞ்சா விற்பனை முயற்சி: 2.4 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது

கோவை பேரூர் காவல் நிலையத்தை சேர்ந்த போலீசார் ராமசெட்டிபாளையம் பகுதியில் குற்றத்தடுப்பு ரோந்தில் ஈடுபட்டபோது, விற்பனைக்கா...

சட்டமன்ற தேர்தலுக்கான EVM மற்றும் VVPAT கருவிகள் முதல்கட்ட சமவாய்ப்பு செயல்முறை நிறைவு

Coimbatore மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT கருவ...

மூலப்பொருள் விலை உயர்வு: ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் அதிகரிப்பு - SIEMA அறிவிப்பு

கோவையை தலைமையிடமாகக் கொண்ட SIEMA, மூலப்பொருட்கள் விலை தொடர்ந்து உயர்வதால் ஏப்ரல் மாதம் முதல் பம்ப்செட் விலையை 7.5 முதல்...

ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் வரை உயரும்: சீமா அறிவிப்பு

காப்பர் உள்ளிட்ட மூலப்பொருள் விலை 50 சதவீதம் உயர்ந்ததால், ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 7.5 முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்க...

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் மாவட்டத் தலைவர் ஜே. ரமேஷ் குமார் முன்னிலையில் நடைபெற்றது...

கோவை பீளமேடுவில் சாலையோரம் தூங்கிய நபர் தலையில் கல்லால் தாக்கப்பட்டு கொலை

கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் பகுதியில் சாலையோரம் தூங்கிய 56 வயது நபர் ரங்கநாதன் மர்ம நபரால் தலையில் கல்லால் தாக்கப்பட்டு...