உலக பார்வை தினம்: கோவை துடியலூரில் மாணவர்கள் விழிப்புணர்வு பிரச்சாரம்

கோவை துடியலூரில் உலக பார்வை தினத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் காவல்துறையினருடன் இணைந்து வாகனங்களின் முகப்பு விளக்குகளுக்கு கருப்பு ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தினர்.



கோவை: கோவை துடியலூர் அருகே வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி சார்பாக உலக பார்வை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.



துடியலூர் சிக்னலில் கல்லூரி மாணவ மாணவிகள் காவல்துறையினருடன் இணைந்து வாகனங்களின் முகப்பு விளக்குகளுக்கு கருப்பு ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.

ஆண்டுதோறும் அக்டோபர் 10ஆம் தேதி கடைபிடிக்கப்படும் உலக பார்வை தினத்தையொட்டி, ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலகு I மற்றும் II சார்பில் துடியலூர் பேருந்து நிலைய சந்திப்பில் இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்பட்டது.



இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் டாக்டர் ஆர்.என். உமா முன்னிலை வகித்தார். துடியலூர் காவல் நிலைய ஆய்வாளர் எஸ்.லதா, உதவி ஆய்வாளர் ஜி.குருகணேஷ், போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள் துரை, சவிதாமணி, மற்றும் பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.



இப்பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, சாலை விபத்துகளைத் தடுப்பது குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வாகனங்களின் முகப்பு பகுதியில் புல்ஸ்ஐ கருப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டது.

இந்நிகழ்வில் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் 80 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட திட்ட அலுவலர்கள் எஸ்.கார்த்திக் மற்றும் சி.வினு ஆகியோர் செய்திருந்தனர்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...