உலக பார்வை தினம்: கோவை துடியலூரில் மாணவர்கள் விழிப்புணர்வு பிரச்சாரம்

கோவை துடியலூரில் உலக பார்வை தினத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் காவல்துறையினருடன் இணைந்து வாகனங்களின் முகப்பு விளக்குகளுக்கு கருப்பு ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தினர்.



கோவை: கோவை துடியலூர் அருகே வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி சார்பாக உலக பார்வை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.



துடியலூர் சிக்னலில் கல்லூரி மாணவ மாணவிகள் காவல்துறையினருடன் இணைந்து வாகனங்களின் முகப்பு விளக்குகளுக்கு கருப்பு ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.

ஆண்டுதோறும் அக்டோபர் 10ஆம் தேதி கடைபிடிக்கப்படும் உலக பார்வை தினத்தையொட்டி, ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலகு I மற்றும் II சார்பில் துடியலூர் பேருந்து நிலைய சந்திப்பில் இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்பட்டது.



இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் டாக்டர் ஆர்.என். உமா முன்னிலை வகித்தார். துடியலூர் காவல் நிலைய ஆய்வாளர் எஸ்.லதா, உதவி ஆய்வாளர் ஜி.குருகணேஷ், போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள் துரை, சவிதாமணி, மற்றும் பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.



இப்பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, சாலை விபத்துகளைத் தடுப்பது குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வாகனங்களின் முகப்பு பகுதியில் புல்ஸ்ஐ கருப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டது.

இந்நிகழ்வில் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் 80 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட திட்ட அலுவலர்கள் எஸ்.கார்த்திக் மற்றும் சி.வினு ஆகியோர் செய்திருந்தனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...