உடுமலையில் வன உயிரின வார விழா: 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஓவியப் போட்டியில் பங்கேற்பு

உடுமலையில் வன உயிரின வார விழாவை முன்னிட்டு நடைபெற்ற ஓவியப் போட்டியில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். வனப் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள ஆர் ஜி எம் மேல்நிலைப் பள்ளியில் வன உயிரின வார விழாவை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் தேவேந்திர குமார் மீனா IFS அவர்களின் உத்தரவின்படி இந்த நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலைப்பேட்டை வனச்சரகம், திருப்பூர் வனக்கோட்டம், எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை மற்றும் ஆரண்யா அறக்கட்டளை ஆகியவை இணைந்து ஓவியம், கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகளை நடத்தின.



இந்நிகழ்வில் உடுமலைப்பேட்டை சுற்று வட்டாரத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் சுமார் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.



மாணவர்கள் வன உயிரினங்களும் வனப்பகுதியும் மனிதர்களின் சுயலாபத்திற்காக சிதைக்கப்படுவது குறித்து தத்ரூபமான ஓவியங்கள் வரைந்தும், கட்டுரைகள் எழுதியும் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். வன உயிரினங்களைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்து வனத்துறை சார்பாக மாணவ மாணவியர்களுக்கு விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது.



நிகழ்ச்சியின் முடிவில், ஓவியப் போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் உதவி வனப் பாதுகாவலர் கீதா IFS, உடுமலைப்பேட்டை வனச்சரக அலுவலர் மணிகண்டன், எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை நிறுவனர் நெல்சன், ஆர் ஜி எம் கல்வி நிறுவனங்களின் மக்கள் தொடர்பு அதிகாரி கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வு மூலம் மாணவர்களிடையே வனப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, அவர்களின் கலை திறமையையும் வெளிக்கொணர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மண்டல அலுவலர்கள் பயிற்சி நிகழ்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக 10 தொகுதிகளுக்கான 366 மண்டல அலுவலர்கள் மற்றும் உதவி மண்டல அலுவலர்க...

T20 உலகக்கோப்பை வீரர் சஞ்சு சாம்சன் கோவை ADISSIA நிறுவனத்தின் Brand Ambassador ஆனார்

T20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன், கோவையைச் சேர...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் DST-FIST ஆதரவுடன் ₹1 கோடி மதிப்பில் ஆராய்ச்சி உள்கட்டமைப்பு வலுப்படுத்தல்

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் மார்ச் 25, 2026 அன்று DST-FIST நிதியுதவியுடன் ₹1 கோடி மதி...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து 'கலைத் தாரகை' விருது வழங்கும் விழா

கோவை ஈச்சனாரியில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து விருது வழங்கும் விழா நடை...

பள்ளபாளையத்தில் புதிய ஆட்டோமொபைல் கடையினை திறந்து வைத்தார் திமுக கழக செயலாளர் முருகேசன்

கோவை தெற்கு மாவட்டம் பள்ளபாளையம் பேரூராட்சி பாப்புலர் கார்டன் பகுதியில் அமைந்துள்ள புதிய ஆட்டோமொபைல் கடையினை திமுக கழக ச...

கோவையில் செல்போனில் பேசியபடி நடந்த இளைஞர் இரண்டாவது மாடியில் இருந்து விழுந்து பலி

கோவை வடவள்ளியில் மனைவியுடன் செல்போனில் பேசியபடி மாடிக்கு நடந்து சென்ற ஜேசிபி ஆபரேட்டர் விவேக் (33) இரண்டாவது மாடியில் இர...