கோவையில் லஞ்சம் வாங்கிய சார்-பதிவாளர் மற்றும் உதவியாளர் கைது: ரூ.13 லட்சம் பறிமுதல்

கோவை வெள்ளலூரில் உள்ள சிங்காநல்லூர் சார்-பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய சார்-பதிவாளர் மற்றும் உதவியாளர் கைது செய்யப்பட்டனர். லஞ்ச ஒழிப்பு போலீசார் காரில் இருந்த ரூ.13 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.


Coimbatore: கோவை வெள்ளலூரில் உள்ள சிங்காநல்லூர் சார்-பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய சார்-பதிவாளர் நான்சி நித்யா கரோலின் மற்றும் இளநிலை உதவியாளர் பூபதி ராஜா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும், சார்-பதிவாளரின் காரில் இருந்த ரூ.13 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

சித்தாபுதூர் தனலட்சுமி நகரைச் சேர்ந்த கருப்புசாமி என்பவர் தனது அசல் பத்திரங்கள் பெறுவதற்காக சிங்காநல்லூர் சார்-பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். இதற்காக சார்-பதிவாளர் நான்சி நித்யா கரோலின், தனது உதவியாளர் பூபதி ராஜா மூலமாக ரூ.35 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து கருப்புசாமி கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் திட்டமிட்டபடி, ரசாயனம் தடவிய ரூ.30 ஆயிரம் பணத்தை கருப்புசாமி மூலம் இளநிலை உதவியாளர் பூபதி ராஜாவிடம் கொடுக்க ஏற்பாடு செய்தனர். பூபதி ராஜா அந்த பணத்தை சார்-பதிவாளர் நான்சி நித்யா கரோலினிடம் கொடுத்தார்.

கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திவ்யா தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார், மறைந்திருந்து கண்காணித்த பின்னர் சார்-பதிவாளர் நான்சி நித்யா கரோலின் மற்றும் இளநிலை உதவியாளர் பூபதி ராஜா ஆகியோரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட பின்னர், போலீசார் சார்-பதிவாளர் நான்சி நித்யா கரோலினின் காரை சோதனை செய்தனர். அதில் ரூ.13 லட்சம் பணம் இருந்தது. ஆனால் அந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால், அந்த தொகையையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.

தற்போது இந்த வழக்கில் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அரசு அதிகாரிகளிடையே நிலவும் ஊழல் குறித்த கவலைகளை மீண்டும் எழுப்பியுள்ளது.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...