காரமடை நகரில் நீலகிரி எம்பி ஆ.ராசா பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார்

நீலகிரி எம்பி ஆ.ராசா காரமடை நகரில் பொதுக்கழிப்பிடம், பயணிகள் நிழற்குடை ஆகியவற்றை திறந்து வைத்தார். மேலும், தேர்தலில் ஆதரவளித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.


கோவை: நீலகிரி எம்பி ஆ.ராசா காரமடை நகரில் பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் அவர் தேர்தலில் தன்னை வெற்றிபெறச் செய்த மக்களுக்கு நன்றி தெரிவித்ததுடன், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக புதிய கட்டமைப்புகளையும் திறந்து வைத்தார்.



காரமடை நகர கழகத்திற்குட்பட்ட பகுதிகளில், தன்னை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்த கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு, திமுக துணைப் பொதுச் செயலாளரும் நீலகிரி பாராளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா நன்றி தெரிவித்தார்.



இந்நிகழ்ச்சியில் தொண்டாமுத்தூர் ரவி, நகர செயலாளர் வெங்கடேஷ், தலைமை செயற்குழு உறுப்பினர் T.R.சண்முகசுந்தரம், மாவட்ட அவை தலைவர் புருஷோத்தமன், காரமடை மேற்கு ஒன்றிய கழக செயலாளர் சு.சுரேந்திரன் மற்றும் கழக முன்னணி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



காரமடை நகராட்சி, வார்டு எண்-17, சாஸ்திரி நகர் பகுதியில் ரூபாய் 27.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமுதாய பொதுக்கழிப்பிட கட்டிடத்தை எம்பி ஆ.ராசா திறந்து வைத்தார்.



மேலும், வார்டு எண்-23 கார் ஸ்டேண்ட் அருகில் ரூபாய் 7.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

இந்நிகழ்வுகளில் மாவட்ட கழகச் செயலாளர் தொ.அ.இரவி, தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஆர்.சண்முகசுந்தரம், ஒன்றிய கழகச் செயலாளர்கள் SMT கல்யானசுந்தரம், சுரேந்திரன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை கழக நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...

12,522 மெட்ரிக் டன் உர இருப்பு கோவையில்; முறைகேடு செய்தால் உரிமம் ரத்து

கோவை மாவட்டத்தில் வரவிருக்கும் கோடைப்பயிர் சாகுபடிக்காக 12,522 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை...

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...