காரமடை நகரில் நீலகிரி எம்பி ஆ.ராசா பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார்

நீலகிரி எம்பி ஆ.ராசா காரமடை நகரில் பொதுக்கழிப்பிடம், பயணிகள் நிழற்குடை ஆகியவற்றை திறந்து வைத்தார். மேலும், தேர்தலில் ஆதரவளித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.


கோவை: நீலகிரி எம்பி ஆ.ராசா காரமடை நகரில் பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் அவர் தேர்தலில் தன்னை வெற்றிபெறச் செய்த மக்களுக்கு நன்றி தெரிவித்ததுடன், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக புதிய கட்டமைப்புகளையும் திறந்து வைத்தார்.



காரமடை நகர கழகத்திற்குட்பட்ட பகுதிகளில், தன்னை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்த கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு, திமுக துணைப் பொதுச் செயலாளரும் நீலகிரி பாராளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா நன்றி தெரிவித்தார்.



இந்நிகழ்ச்சியில் தொண்டாமுத்தூர் ரவி, நகர செயலாளர் வெங்கடேஷ், தலைமை செயற்குழு உறுப்பினர் T.R.சண்முகசுந்தரம், மாவட்ட அவை தலைவர் புருஷோத்தமன், காரமடை மேற்கு ஒன்றிய கழக செயலாளர் சு.சுரேந்திரன் மற்றும் கழக முன்னணி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



காரமடை நகராட்சி, வார்டு எண்-17, சாஸ்திரி நகர் பகுதியில் ரூபாய் 27.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமுதாய பொதுக்கழிப்பிட கட்டிடத்தை எம்பி ஆ.ராசா திறந்து வைத்தார்.



மேலும், வார்டு எண்-23 கார் ஸ்டேண்ட் அருகில் ரூபாய் 7.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

இந்நிகழ்வுகளில் மாவட்ட கழகச் செயலாளர் தொ.அ.இரவி, தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஆர்.சண்முகசுந்தரம், ஒன்றிய கழகச் செயலாளர்கள் SMT கல்யானசுந்தரம், சுரேந்திரன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை கழக நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...