தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டிக்கு அன்னூர் மாணவர் தேர்வு: தமிழக அணியில் இடம்பிடித்த ஸ்ரீ ரித்திக்

கோவை அன்னூர் அருகே உள்ள கிருஷ்ண கவுண்டன் புதூரைச் சேர்ந்த மாணவர் ஸ்ரீ ரித்திக், 14 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய அளவிலான பள்ளி மாணவர்களுக்கான கூடைப்பந்து போட்டியில் தமிழக அணிக்காக விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


Coimbatore: கோவை நேரு விளையாட்டரங்கில் செயல்பட்டு வரும் விளையாட்டு விடுதியில் பயிற்சி பெற்று வரும் அன்னூர் அருகே கிருஷ்ண கவுண்டன் புதூரைச் சேர்ந்த மாணவர் ஸ்ரீ ரித்திக், தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டியில் தமிழக அணிக்காக விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவை நேரு விளையாட்டரங்கில் உள்ள விளையாட்டு விடுதியில் தங்கி பயிற்சி பெற்று வரும் ஸ்ரீ ரித்திக், கோவை ராம் நகரில் உள்ள சபர்பன் மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்திய பள்ளிகள் விளையாட்டு ஆணையம் சார்பில், 2024-25ம் கல்வியாண்டுக்கான 14 வயதுக்கு உட்பட்ட தேசிய அளவில் பள்ளி மாணவர்களுக்கான கூடைப்பந்து போட்டி நடைபெற உள்ளது. இதற்கான மாநில அளவிலான வீரர்கள் தேர்வுப் போட்டி அண்மையில் காஞ்சிபுரத்தில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் பங்கேற்ற ஸ்ரீ ரித்திக், சிறப்பாக விளையாடி தமிழக அணிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் அவர் தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டியில் தமிழகம் சார்பில் விளையாட உள்ளார்.

தமிழக அணிக்குத் தேர்வு பெற்ற ஸ்ரீ ரித்திக்குக்கு விளையாட்டு அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...