ஆன்லைன் பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் - கோவை பட்டாசு விற்பனையாளர்கள் கோரிக்கை

கோவையில் பட்டாசு விற்பனையாளர்கள் செய்தியாளர் சந்திப்பு நடத்தி, ஆன்லைன் பட்டாசு விற்பனையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கி, அரசு இதனை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.


Coimbatore: கோவை ஆடிஸ் வீதியில் உள்ள கோயமுத்தூர் பத்திரிக்கையாளர் மன்றத்தில் கோவை மாவட்ட பட்டாசு விற்பனை சிறு வியாபாரிகள் நலச்சங்கத்தினர் செய்தியாளர்களை இன்று (அக்டோபர் 9) சந்தித்தனர். இச்சங்கத்தின் தலைவர் சின்னுசாமி, செயலாளர் பாரதிமோகன், அமைப்பாளர் இராமையா ஆகியோர் ஆன்லைன் பட்டாசு வர்த்தகத்தால் சிறு வியாபாரிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கினர்.

அவர்கள் கூறியதாவது: "ஆன்லைனில் பட்டாசு விற்பனை செய்யக்கூடாது என்று நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தும், ஆன்லைன் வர்த்தகம் தொடர்ந்து நடைபெறுகிறது. இதனால் சிறு வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆன்லைன் விற்பனையால் அரசுக்கு எந்த லாபமும் இல்லை. எனவே, அரசு ஆன்லைன் பட்டாசு விற்பனையை உடனடியாக தடை செய்ய வேண்டும்."

"ஆன்லைனில் ஆர்டர் செய்யப்படும் பட்டாசுகள் பாதுகாப்பற்ற முறையில், வழக்கமான போக்குவரத்து வாகனங்களில் கொண்டு வரப்படுகின்றன. மேலும், தள்ளுபடி என்ற பெயரில் தரமற்ற பட்டாசுகள் விற்கப்படுகின்றன. சிவகாசியை மையமாகக் கொண்டு கவர்ச்சியான விளம்பரங்கள் மூலம் தரமற்ற பொருட்கள் விற்கப்படுகின்றன. இவ்வாறு விற்பனை செய்பவர்கள் ஜிஎஸ்டி பில் வழங்குவதில்லை. இதனால் பொதுமக்கள் புகார் அளிக்க முடியாத நிலை ஏற்படுகிறது," என்று அவர்கள் சுட்டிக்காட்டினர்.

வியாபார உரிமம் தொடர்பாக அவர்கள் கூறுகையில், "தற்போது 10 நாட்களுக்கு மட்டுமே வழங்கப்படும் வியாபார உரிமத்தை 15 நாட்களாக நீட்டிக்க வேண்டும். மேலும், பட்டாசு வெடிப்பதற்கான நேர கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும்," என்று கோரிக்கை விடுத்தனர்.

சரவெடி தயாரிப்பு குறித்தும் அவர்கள் கருத்து தெரிவித்தனர். "சரவெடியை பழைய முறைப்படி இரசாயனங்களைக் கொண்டு தயாரிக்க அனுமதிக்க வேண்டும். அரசு கூறிய புதிய நிபந்தனைகளின்படி சரவெடியை தயாரிக்க இயலாது," என்று அவர்கள் தெரிவித்தனர்.

இறுதியாக, "தீயணைப்புத் துறையின் அறிவுறுத்தலின்படி பட்டாசுகளை எவ்வாறு பாதுகாப்பாக வெடிக்க வேண்டும் என்பது குறித்த நோட்டீஸ்களை அனைத்து பட்டாசு கடைகளிலும் வழங்க உள்ளோம். மேலும், 'இந்த தீபாவளியை விபத்தில்லா தீபாவளியாக கொண்டாடுவோம்' என்ற வாசகத்துடன் கடைகளில் விளம்பரப் பலகைகள் வைக்கப்படும்," என்று அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

“நான் தான் எல்லாம்” எண்ணத்தில் எடப்பாடி செயல்படுகிறார்: செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நிலைப்பாடுகள் எம்....

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...