ஆன்லைன் பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் - கோவை பட்டாசு விற்பனையாளர்கள் கோரிக்கை

கோவையில் பட்டாசு விற்பனையாளர்கள் செய்தியாளர் சந்திப்பு நடத்தி, ஆன்லைன் பட்டாசு விற்பனையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கி, அரசு இதனை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.


Coimbatore: கோவை ஆடிஸ் வீதியில் உள்ள கோயமுத்தூர் பத்திரிக்கையாளர் மன்றத்தில் கோவை மாவட்ட பட்டாசு விற்பனை சிறு வியாபாரிகள் நலச்சங்கத்தினர் செய்தியாளர்களை இன்று (அக்டோபர் 9) சந்தித்தனர். இச்சங்கத்தின் தலைவர் சின்னுசாமி, செயலாளர் பாரதிமோகன், அமைப்பாளர் இராமையா ஆகியோர் ஆன்லைன் பட்டாசு வர்த்தகத்தால் சிறு வியாபாரிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கினர்.

அவர்கள் கூறியதாவது: "ஆன்லைனில் பட்டாசு விற்பனை செய்யக்கூடாது என்று நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தும், ஆன்லைன் வர்த்தகம் தொடர்ந்து நடைபெறுகிறது. இதனால் சிறு வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆன்லைன் விற்பனையால் அரசுக்கு எந்த லாபமும் இல்லை. எனவே, அரசு ஆன்லைன் பட்டாசு விற்பனையை உடனடியாக தடை செய்ய வேண்டும்."

"ஆன்லைனில் ஆர்டர் செய்யப்படும் பட்டாசுகள் பாதுகாப்பற்ற முறையில், வழக்கமான போக்குவரத்து வாகனங்களில் கொண்டு வரப்படுகின்றன. மேலும், தள்ளுபடி என்ற பெயரில் தரமற்ற பட்டாசுகள் விற்கப்படுகின்றன. சிவகாசியை மையமாகக் கொண்டு கவர்ச்சியான விளம்பரங்கள் மூலம் தரமற்ற பொருட்கள் விற்கப்படுகின்றன. இவ்வாறு விற்பனை செய்பவர்கள் ஜிஎஸ்டி பில் வழங்குவதில்லை. இதனால் பொதுமக்கள் புகார் அளிக்க முடியாத நிலை ஏற்படுகிறது," என்று அவர்கள் சுட்டிக்காட்டினர்.

வியாபார உரிமம் தொடர்பாக அவர்கள் கூறுகையில், "தற்போது 10 நாட்களுக்கு மட்டுமே வழங்கப்படும் வியாபார உரிமத்தை 15 நாட்களாக நீட்டிக்க வேண்டும். மேலும், பட்டாசு வெடிப்பதற்கான நேர கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும்," என்று கோரிக்கை விடுத்தனர்.

சரவெடி தயாரிப்பு குறித்தும் அவர்கள் கருத்து தெரிவித்தனர். "சரவெடியை பழைய முறைப்படி இரசாயனங்களைக் கொண்டு தயாரிக்க அனுமதிக்க வேண்டும். அரசு கூறிய புதிய நிபந்தனைகளின்படி சரவெடியை தயாரிக்க இயலாது," என்று அவர்கள் தெரிவித்தனர்.

இறுதியாக, "தீயணைப்புத் துறையின் அறிவுறுத்தலின்படி பட்டாசுகளை எவ்வாறு பாதுகாப்பாக வெடிக்க வேண்டும் என்பது குறித்த நோட்டீஸ்களை அனைத்து பட்டாசு கடைகளிலும் வழங்க உள்ளோம். மேலும், 'இந்த தீபாவளியை விபத்தில்லா தீபாவளியாக கொண்டாடுவோம்' என்ற வாசகத்துடன் கடைகளில் விளம்பரப் பலகைகள் வைக்கப்படும்," என்று அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...